Aran Sei

பாஜகவை விமர்சித்ததால் தொலைக்காட்சி சேனலுக்கு தடையா? – மீடியா ஒன் தலைவரோடு நேர்காணல்

Credit : The Hindu

ன்றிய அரசால் தடை செய்யப்பட்ட மலையாள தொலைக்காட்சியின் தலைவர் பிரமோத் ராமன், பத்திரிகை மீதான தாக்குதல், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரங்கள், ‘தேசிய பாதுகாப்பைவலியுறுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் நீதித்துறை குறித்து பேசுகிறார்.

மீடியாஒன் என்ற மலையாள தொலைக்காட்சியை  ஒளிபரப்ப தடை விதித்த ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் இந்த வாரம் தள்ளுபடி செய்தது.

தொலைக்காட்சியின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் மறுத்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது. ஆனால் அதில் சேனலுக்கும், மக்களுக்கும் எதிராக ஒன்றிய அரசின் சரியான குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும்  தெரிவிக்கப்படவில்லை.

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள்: ஐபிசிசி அறிக்கை விடுக்கும் எச்சரிக்கைகள் என்னென்ன?

இருப்பினும், நீதிபதி என். நாகரேஷின் அமர்வு,  சேனலுக்கு எதிரான ஒன்றிய அரசின் ரகசிய “தேசிய பாதுகாப்பு” கவலைகளை நியாயப்படுத்தி, சேனலின் மேல்முறையீட்டை நிராகரித்தது. இந்த நியாயம் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

மீடியாஒன், மோடி அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் அடிக்கடி விமர்சனம் செய்து வெளியிடப்படும் அறிக்கைகளுக்கு பெயர் பெற்ற, இஸ்லாமிய நிர்வாகத்தால் நடத்தப்படும் பிரபலமான மலையாள செய்தி சேனலாகும். சேனலின் நிருபர்கள் ரெட்இங்க் மற்றும் ராம்நாத் கோயங்கா விருதுகள் உட்பட பல பத்திரிகை விருதுகளை வென்றுள்ளனர்.

பிப்ரவரி 9 அன்று,  சேனல், கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதே நாளில், தி வயர் சேனலின் ஆசிரியர், மூத்த பத்திரிகையாளர் பிரமோத் ராமனுடன் கோழிக்கோட்டில் உள்ள  சேனலின் தலைமையகத்தில் பேசியது.

மீடியாஒன்னுக்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கையையும், தடையை உறுதி செய்த கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது மீடியாஒன்னுக்கு எதிரான தீர்ப்பு அல்ல. அரசின் இந்த நடவடிக்கை, நாட்டில் பத்திரிகை நடைமுறை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பும் ஒரு முக்கியமான படியாகும். மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்பு அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.

முருகன் சுப்ரமணியன் ஆன கதை – சூர்யா சேவியர்

இதழியல் நடைமுறையின் அடித்தளம் அரசியலமைப்பின் 19(1) (a) பிரிவாகும். பேச்சு சுதந்திரம் தொடர்பான பிரச்சினையை தீர்மானிக்கும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், அத்தகைய முடிவுகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும், அத்தகைய முடிவுகளை அதிகாரிகள் குழுவால் எளிமையாகவும் அவசரமாகவும் எடுக்க முடியுமா என்பது பற்றிய விவாதங்கள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மீடியாஒன் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது.  நாளை மற்றொரு செய்தி சேனல் பாதிக்கப்படலாம்.’தேசிய பாதுகாப்பு’ என்பது [இந்த வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் உயர் நீதிமன்றங்கள் இரண்டும் பயன்படுத்தியது] ஒரு பாதுகாப்புச் சொல்.இந்த வார்த்தையின் கீழ் என்ன வரலாம் என்பது குறித்து நம்மிடம்  நன்கு வரையறுக்கப்பட்ட கருத்து இல்லை. அது [ஊடக அறிக்கையின்] உள்ளடக்கமாகவோ,  அல்லது முதலீடாகவோ அல்லது ஏதேனும் நிர்வாக நடவடிக்கையாகவோ இருக்கலாம். எனவே,  இந்த ‘தேசிய பாதுகாப்பு’ என்பது ஒரு பரந்த கருத்து.ஒன்றிய உள்துறை அமைச்சகம், ‘தேசியப் பாதுகாப்பின்’ கீழ் வரும் எந்தவொரு விஷயத்திலும், அதிகாரிகள் குழுவின் விருப்ப அதிகாரங்களை நம்பி, எளிதாக முடிவெடுக்கும் சூழ்நிலை – மற்றும் நீதிமன்றத்தின் நியாயப்படுத்தல் ஆகியவை இந்த நாட்டில் பத்திரிகைகளுக்கு உதவாது.

2020 ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தை சேனலின் ஒளிபரப்புக்காக மீடியாஒன் நிறுவனத்திற்கு எதிராக ஒன்றிய அரசு ஏற்கனவே இதேபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக மோடி அரசாங்கத்தால் இந்த சேனல் குறிவைக்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

நான் வித்தியாசமாக பார்க்கிறேன். மீடியாஒன் மீதான தாக்குதலைக் காட்டிலும், இதழியல் பற்றிய முழு கருத்தையும் குறிவைக்கும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. 2020ல் நீங்கள் குறிப்பிட்ட 48 மணிநேர தடை விரைவில் அரசாங்கத்தால் நீக்கப்பட்டது. தவிர, காரணம் [அரசு கூறியது] அப்போது மிகத் தெளிவாக இருந்தது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் டெல்லி காவல்துறையின் செயலற்ற தன்மை ஆகியவை குறித்த எங்கள் விமர்சன ஒளிபரப்பு காரணமாக தடை விதிக்கப்பட்டது என்று அரசாங்கத்தின் விளக்கம் தெளிவாகக் கூறியது. எனவே, அரசின் நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இது ஒரு அபத்தமான நடவடிக்கை என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து அது விரைவில் திரும்பப் பெறப்பட்டது. அப்போது ஏசியாநெட் நியூஸ் மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீங்கள் மீடியா ஒன்னின் ஆசிரியராக நீண்ட காலத்திற்கு முன்பு சேர்ந்தீர்கள். கடந்த பல ஆண்டுகளாக கேரளாவின் காட்சி இதழியல் வளர்ச்சியடைந்து வருவதை நீங்கள் கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள். மீடியாஒன் மற்றும் மீடியாஒன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பத்திரிக்கையில் ஏதேனும் குறிப்பாக நீங்கள் கவனித்தீர்களா?

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனங்களுக்கான சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை சுதந்திரமாக தெரிவிக்கவும் விவாதிக்கவும் சுதந்திரமாக உள்ளது. செய்தி நிறுவனங்களுக்குள் சுதந்திரம் இருக்க வேண்டும். எந்த மலையாள செய்தி சேனலிலும் இந்த சுதந்திரம் மறுக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. எங்கள் தடை பற்றி [பிப்ரவரி 8] கிட்டத்தட்ட எல்லா சேனல்களிலும் விவாதிக்கப்பட்டது இதை நிரூபிக்கிறது. எனவே பொதுவாக எந்தப் பிரச்சினையும் இல்லை.இருப்பினும், மீடியாஒன் போன்ற சேனல்கள் மட்டுமே குறிப்பிட்ட சிலவற்றில் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியும்.எங்கள் கொள்கை ஆவணமே நாங்கள் ” குரலற்றவர்களின் குரல்” என்று சொல்கிறது.  ஒதுக்கப்பட்டவர்களுக்கும்,  நீதி மறுக்கப்பட்டவர்களுக்கும் துணை நிற்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளோம். இதழியலின் மையத்தின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று எங்களிடம் உள்ளது. இது ஒருவேளை மீடியாஒன்னை ஒரு வித்தியாசமாக  காட்டலாம்.

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வருவோம். தீர்ப்பின் விவரங்களுக்குச் செல்வதற்கு முன், அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்தின் முன் தடை மட்டுமே தீர்வா என்று நான் கேட்க விரும்புகிறேன். குறைவான கடுமையான நடவடிக்கைகள் இல்லையா? சட்ட நிபுணர் கவுதம் பாட்டியாவும் எழுப்பிய கேள்வி இதுதான்.

இது ஒரு மிக முக்கியமான கருத்து. கௌதம் பாட்டியாவின் அனுமானங்கள் மிகவும் முக்கியமானவை. நாம் முன்பு விவாதித்த 48 மணி நேர தடையாக இருந்தாலும் சரி, அல்லது கடந்த காலத்தில் என்டிடிவி (NDTV)  மீதான ஒரு நாள் தடையாக இருந்தாலும் சரி, அந்த நகர்வுகள் ஒப்பீட்டளவில் அரசாங்கத்தின் சிறிய நடவடிக்கைகளாகும். அந்த சந்தர்ப்பங்களில், அரசாங்கம் மிகவும் சிறந்த, ஜனநாயக வழியில் நடைமுறைகளைப் பின்பற்றியது. தடை செய்யப்பட்டதற்கான காரணத்தை சேனல்களுக்குத் தெரிவித்த அரசாங்கம், அவற்றிற்குப் பதிலளிக்க வாய்ப்பளித்தது. என்டிடிவி வழக்கில், பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சேனல் நிர்வாகத்துடன் கூட விவாதங்களை நடத்தினர். என்டிடிவிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தூண்டிய பிரச்சினை ‘தேசிய பாதுகாப்பு’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அரசாங்கம் சேனலுக்கு வாய்ப்பு அளித்து அதன் ஊழியர்களை விவாதத்திற்கு அழைத்தது.ஆனால் இங்கே, திருத்துவதற்கு ஏதாவது இருந்தால், நமக்குத் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்காமல் அரசாங்கம் அவசரமாகவும் நேரடியாகவும் தடை விதித்துள்ளது.  எங்கே நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் இருக்கிறது.

நியூட்ரினோ விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பொய் கூறிய ஒன்றிய அரசு – பூவுலகின் நண்பர்கள்

உள்துறை அமைச்சகம் சேனலுக்கு பாதுகாப்பு அனுமதியை மறுத்ததை அடுத்து, உரிமம் புதுப்பிப்பதற்கான மீடியா ஒன்னின் விண்ணப்பத்தை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நிராகரித்தது. பாதுகாப்பு அனுமதி ஏன் மறுக்கப்பட்டது என்பது பற்றி ஒன்றிய  அரசு அதிகம் கூறவில்லை.  ஆனால் தீர்ப்பில் நாம் காண்பது போல், அனுமதியை மறுக்க உள்துறை அமைச்சகத்திற்கு  “போதுமான காரணங்கள்” இருப்பதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது.  இதைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்து ஏதேனும் துப்பு உள்ளதா?

பலர் என்னிடம் கேட்ட கேள்வி இது. மேலும் எனது பதில் ஒன்றுதான்: இதைப் பற்றி உங்களை விட எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த தடை தொடர்பான சமீபத்திய தகவல் உயர்நீதிமன்ற தீர்ப்பில் இருந்து வந்தது. முதலில் எங்களுக்குக் காரணம் காட்ட தாக்கீது அனுப்பப்பட்டது. ஆனால் எது குறித்து காரணத்தைக் காட்ட வேண்டும் என்று இந்த தாக்கீதில் கூறவில்லை.

இந்த அறிவிப்பில் குறிப்பாக ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா?

இல்லை. உள்துறை அமைச்சகம் எங்களின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்துவிட்டதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. எனவே சேனலை ஏன் தடை செய்யக்கூடாது என்பதை விளக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்புக்கு என்ன பொருள்?  இது ஒருவரிடம் உங்களை ஏன் கொல்லக் கூடாது என்பதற்கான காரணங்களைக் கேட்பதற்கு ஒப்பானது. நாங்கள் முற்றிலும் இருட்டில் வைக்கப்பட்டோம்.

தேசிய பாதுகாப்பைபாதிக்கிறது என்பது சேனலுக்கு எதிரான ஒன்றிய அரசின் முக்கிய வாதம்இதனை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.  தேசிய பாதுகாப்புகவலைகள் வரும்போது இயற்கை நீதி கூட இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது. அதில் “…இயற்கை நீதி மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் நீதிமன்றங்கள் தலையிடும் கொள்கைகள் மிகக் குறைந்த பங்கைக் கொண்டுள்ளன”.  மேலும், “தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், நீதித்துறை மறுஆய்வுக்கான வரம்பு குறைவாக உள்ளது என்பது சட்டத்தின் உறுதியான நிலைப்பாடு” என்றும் அது கூறியது.எனவே, அரசாங்கம் தேசிய பாதுகாப்பை‘  நினைத்தவுடன்,  நீங்கள் ஏன் தடை செய்யப்படுவீர்கள் என்பதை அது உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லைஅது உங்களுக்குக் கேட்க வாய்ப்பளிக்கவும் இல்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இயற்கை நீதி’ என்பது நமது நீதித்துறையில் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அது அடிப்படை உரிமையல்ல. ஆனால் இயற்கை நீதி இல்லாத நிலையில் செய்யப்படும் நீதித்துறை நடைமுறை பயனுள்ளதா இல்லையா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இது சரியான செயலா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டிய ஒரு தீர்ப்பு, 2014 இல் நீதிபதி குரியன் ஜோசப் எழுதிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் பெகாசஸ் வழக்கின் தீர்ப்பும் நம்மிடம் உள்ளது. அது பரிசீலிக்கப்படவில்லை. பெகாசஸ் விசாரணையின் போது, ​​’தேசிய பாதுகாப்பு’ கோணம் செயல்படுத்தப்பட்டபோது நீதிமன்றம் ஒன்றிய அரசை கடுமையாக சாடியது.”தேசிய பாதுகாப்பு என அரசால் அழைக்கப்படுவது நீதிமன்றத்தை ஒரு ஊமைப் பார்வையாளனாக மாற்றாது” என்று உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் கூறியது.நமது நீதித்துறையின் ஞானம் வளர்ந்து வருகிறது. எனவே, 2014 தீர்ப்பு அல்லது சமீபத்திய பெகாசஸ் தீர்ப்பை நாம் கருத்தில் கொள்ள வேண்டுமா என்பது கேள்வி. காலப்போக்கில், புதிய சூழ்நிலைகள் உருவாகும்போது, ​​ தீர்ப்புகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம். நாம் அதைப் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்

தீர்ப்பில் விவாதிக்கப்பட்ட மற்றொரு கருத்து தேசிய நலன்‘. ‘தேசிய நலனில்என்ன இருக்கிறது, எது இல்லை என்பதை தீர்மானிப்பதில் சட்டமன்றத்திற்கோ அல்லது நீதித்துறைக்கோ இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு அறிவுறுத்துகிறது.அந்தத் தீர்ப்பில், “அரசின் நலனுக்காக ஏதாவது இருக்கிறதா இல்லையா என்பதை நிர்வாகத்தினரிடம் விட்டுவிட வேண்டும்என்று கூறுகிறது. உண்மையில், விசாரணையின் போது ஒன்றிய  அரசின் நிலைப்பாடு இதுதான்…

நிர்வாகத்தின் அதிகாரங்கள் பற்றி நமக்கு நல்ல தெளிவு உள்ளது. சட்டமன்றம் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்களையும் நாம் அறிவோம். அரசியலமைப்பில் இதைப் பற்றி கூறப்பட்டுள்ளதைத் தவிர, பல நீதித்துறை விவாதங்கள் மூலம் இது குறித்து நமக்கு புரிதல் உள்ளது.நிர்வாகம் என்பது நாடாளுமன்றம் கூட அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒரு அமைப்பாக, நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கருத்துருவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. ஆனால் நிர்வாக அமைப்பு வேறு. எனவே, ‘தேசிய நலன்’ என்பதன் வரையறையானது நிறைவேற்று அதிகாரத்தின் விருப்புரிமைகளை மட்டுமே சார்ந்து இருக்கும் போது, ​​மேலும் அத்தகைய வரையறைகள் அடிப்படை உரிமைகளைக்கூட மீறும் போது, ​​அது ஒரு பிரச்சனை ஆகிறது.  தவிர, 2011ல் ராம் ஜெத்மலானி வழக்கில் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு அரசுக்கு உள்ளது  என்று உச்ச நீதிமன்றம்  கூறியுள்ளது.   அப்போது, “அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது முதன்மையாக அரசின் கடமை,” என்று நீதிமன்றம் கூறியது. எனவே,  “அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் சுமையை” சுமந்துகொண்டிருக்கும் அதே அரசாங்கம்தான் இப்போது இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது.இப்போது, ஒரு ​​நிர்வாகி மிகவும் ரகசியமான தகவல்களின் அடிப்படையில் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும் கூட,  இங்கு கூறப்பட்ட நடவடிக்கை ஒரு ஊடக நிறுவனத்தை மூடுவது என்பதால், அந்த ரகசிய தகவல் என்ன என்பதை அறிய பொதுமக்களுக்கு முழு உரிமை உள்ளது. பொதுமக்களுக்கு கண்டிப்பாக அந்த உரிமை உண்டு. அந்த உரிமையை அரசு மதிக்க வேண்டும்.

நமது நீதித்துறை வளர்ச்சியடைந்து வருகிறது என்று சொன்னீர்கள். சுவாரஸ்யமாக, ரிக்வேத காலத்தின் பழங்கால நூலான அத்ரிசம்ஹிதாவை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று தேசிய பாதுகாப்புகுறித்த தனது கருத்தை தெரிவிக்கிறது. அதில் உங்கள் கருத்து என்ன?

இது குறித்து பல்வேறு சட்ட நிபுணர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர்.ஜனநாயகம் இருக்கும் இந்த நேரத்தில், சிவில் மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் அத்தகைய உரிமைகளை எவ்வாறு சிறப்பாகப் பாதுகாக்க முடியும் என்பது பற்றிய பரந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு  இருக்கும் போது, ​​ஜனநாயகம் இல்லாத காலகட்டத்தில் எழுதப்பட்ட உரையை எவ்வாறு மேற்கோள் காட்ட முடியும்? இது ஒரு அடிப்படையான கேள்வி. சட்ட வல்லுநர்கள் இதைப் பற்றி மேலும் கருத்து தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன்.

“தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர்

நீதிமன்ற தீர்ப்பில் இருந்து நகர்ந்து, மீடியாஒன் மீதான ஒன்றிய  அரசின் தடை ஒரு தனிமையான சம்பவம் அல்ல. வட இந்தியா உட்பட நாட்டின் பிற பகுதிகளையும், குறிப்பாக காஷ்மீரில் உள்ள மற்ற பகுதிகளையும் கவனித்தால், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது பரவலாக குறிவைக்கப்படுவதை நாம் காணலாம். ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் நாட்டில் வளர்ந்து வரும் இந்தப் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது நிச்சயமாக மிகவும் கவலைக்குரிய விஷயம். [இந்திய தண்டனைச் சட்டம்] பிரிவு 124A அல்லது தேசத்துரோகத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை எந்த குடிமகன் மீதும் பயன்படுத்தக்கூடாது.இந்த காலனித்துவ காலச் சட்டத்தை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் தங்கள் நாட்டிலேயே இந்தச் சட்டத்தை ஒழித்த போதும், இங்கே இன்னும் பயன்படுத்தப்படுவதைக் காண்கிறோம். இந்தச் சட்டம் பத்திரிகையாளர்கள், சிவில் உரிமை ஆர்வலர்கள் அல்லது எவருக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.இந்தச் சட்டத்தால்தான் பலர் சிறைகளில் வாடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். எனவே, இந்தச் சட்டம் மீண்டும் மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது விரும்பத்தக்கது அல்ல. இது நாட்டின் இருப்புக்கே ஆபத்தை விளைவிக்கும், அதே போல் அதன் ஜனநாயக அமைப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும்.

டிஜிட்டல் மீடியாவின் யுகத்தில், மற்றும் சமூக ஊடக தளங்களின் புதிய மாறுபாடுகள் பிரபலமடைந்து வருவதை நாம் வழக்கமாகக் காணும்போது, ​​’ஊடக உரிமங்கள்என்ற கருத்தையும் இன்று அவற்றின் பொருத்தத்தையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது ஒரு முக்கியமான கேள்வி. நாங்கள் ‘உரிமங்களைத் தரும் அரசு’ போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம், ஏனெனில் இது அடிப்படையில் நிர்வாகி ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்பாகவே உள்ளது. சினிமா, பல்வேறு கலை வடிவங்கள் மற்றும் கலாச்சாரத் துறையில் இருக்கும் தணிக்கை பற்றிய விரிவான விவாதங்கள் உள்ளன. அதேபோல், ஊடகத் துறையில், குறிப்பாக புவியியல் எல்லைகள் மறைந்து போகும் நேரத்தில், நல்ல உரிம நடைமுறைகள் என்ன செய்கின்றன என்பதையும் நாம் கேட்க வேண்டும்.

உங்கள் சேனல் கேரளாவில் பிரபலமானது. ஒன்றிய  அரசு கடந்த மாதம் தடை விதித்ததில் இருந்து, பொதுமக்களிடமிருந்து, சாதாரண மக்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கேரள முதல்வர் வரை ஆதரவு பெருகி வருகிறது.

நாங்கள் பெரும் ஆதரவைப் பெறுகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் கேரள சமூகத்தில் இருந்து நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு குரலும் எழுப்பப்படுகிறது. நாங்கள் இடதுசாரிகள், மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மற்றும் கட்சிகள் என்று அழைக்கும் பொது மக்களிடமிருந்தும், சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறோம். எங்களுடன் உடன்படாத பலர் இருக்கலாம். ஆனால் அவர்களும் கூட நமது குரலை எழுப்பும் உரிமையை, சுதந்திரமான கருத்துரிமையைப் பாதுகாக்க எங்களுடன் நிற்கிறார்கள். இந்த ஒற்றுமை ஒரு பெரிய விஷயம்.

இறுதியாக, எதிர்காலத்திற்காக என்ன காத்திருக்கிறது?

ஏற்கனவே கேரள உயர் நீதிமன்ற பிரிவு அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளோம். எங்களுக்காக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராவார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்