வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, கர்நாடக முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டிய பெண், கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மூன்று பக்ககடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுவேலை பெற்று தருவதாக கூறி, பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டிற்கு உள்ளான கர்நாடக நீர்வளத்துறை முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி தொடர்பான காணொளி, தொலைக்காட்சிகளில் வெளியானதை தொடர்ந்து, அவர் பதவி விலகினார்.
இது தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில், அமைச்சர் மீது குற்றம்சாட்டிய பெண், மேலும் சில காணொளிகளையும் வெளியிட்டு வந்தார்.
எனக்கு உரிய பாதுகாப்பளிக்க வேண்டும் – பாஜக அமைச்சரால் பாதிக்கப்பட்ட பெண் காணொளி வெளியீடு
இந்நிலையில் அந்தப் பெண் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் , அமைச்சர் இந்த வழக்கைத் திரும்பப்பெற சொல்லி மிரட்டுவதாகவும், தான் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தது போல, சிறப்பு புலனாய்வு குழு தனக்கும்.தன்குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தி கூறுகிறது.
மேலும் , “சிறப்பு புலனாய்வு குழு அமைச்சருக்குச் சார்பாகச் செயல்பட்டு வருகிறது. அமைச்சரும் அமைச்சரின் தொண்டர்களும் எனக்குக் கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர் ” என்று அந்த கடித்தத்தில் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The news of CD victim, writing a letter to High Court Chief Justice about threat to her life, is distressing & terrifying.
Mr. @BSYBJP,
Is your govt working in Karnataka?1/3
— Siddaramaiah (@siddaramaiah) March 29, 2021
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா “பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு வேண்டி நீதிபதிக்குக் கடிதம் எழுதுகிறார். என்ன கொடுமை. கர்நாடக மாநில அரசு செயல்படுகிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், சிறப்பு புலனாய்வுக் குழு, அமைச்சருக்கு சார்பாக செயல்படுகிறது என்று தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.