இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நாட்டுபடகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவ குடும்பங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பாம்பன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக, இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கைக் கடற்படைத் தாக்குதல் நடத்துவதும் கைது செய்வதும் படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
தமிழக மீனவர்கள் படுகாயம் – தொடரும் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்
நாட்டுபடகுகள்
கடந்த 2016ஆம் ஆண்டு, ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் நம்புதாளைப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 19 நாட்டுபடகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி பறிமுதல் செய்துள்ளனர்.
படகுகள் தற்போது இலங்கையின் பல்வேறு கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான்கு வருடங்களாகியும் படகுகள் விடுதலை செய்யப்படாததால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகவும் வறுமையில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்
எனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று (நவமபர் 20) இந்த கோரிக்கையை முன்வைத்து பாம்பன் தெற்கு கடல் பகுதியில், மீனவப் பெண்களும் நாட்டுபடகு மீனவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்
மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால், 19 குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பதாகவும், தங்களின் கோரிக்கையை அரசுகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகம் மீனவர்கள் கோஷம் எழுப்பியுள்ளார்கள்.
போராட்டத்திற்குப் பின்பு மத்திய மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்கவில்லையென்றால் சென்னையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் அளவில் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
விசைப்படகுகள்
2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. இதில் நல்லெண்ண அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.
`பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி, மீதமுள்ள 121 படகுகளையும் அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக விசைப்படகு மீனவர்களிடையே பெரும் வாழ்வாதாரப் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.