Aran Sei

‘விதி மீறும் தனியார் பொறியியல் கல்லூரிகள்’: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்

ல்விக் கட்டணம் செலுத்துவதற்காக தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதென்பது அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்வி குழு (AICTE)-வின் வழிகாட்டலுக்கு எதிரான நடவடிக்கை என்பதால் இதைத் தடுக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்திவைத்துள்ளன. அதே வேளை கட்டணம் செலுத்திய மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளன. அத்துடன் உங்கள் பெற்றோர்களிடம் சொல்லி உடனே கட்டணம் செலுத்துங்கள் என்று அக்கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளன” என்று கூறியுள்ளார்.

‘25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை கலைஞர் பிறந்தநாளில் விடுவிக்க வேண்டும்’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணி வேண்டுகோள்

மேலும், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் இவ்வாறு கல்விக் கட்டண பாக்கிக்காக தேர்வு முடிவுகளை தெரிவிக்காமல் நிறுத்திவைத்துள்ளது, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்வி குழு (AICTE)-வின் வழிகாட்டலுக்கு எதிரான செயல் ஆகுமென்றும், கொரோனா பெருந்தொற்று முடக்கக் காலத்தில் பொறியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும், பழிவாங்கக் கூடாது என்றும் ஏ.ஐ.சி.டி.இ ஏற்கெனவே எச்சரித்துள்ளதாகவும்  பெ.மணியரசன் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத ரீதியான பாகுபாட்டால் விடுவிக்கப்படாமல் இருக்கும் இஸ்லாமிய கைதிகள்: விடுவிக்க கோரி தமிழக முதல்வருக்கு கைதிகள் உரிமை கழகத்தினர் வேண்டுகோள்

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இது குறித்து புகார் அனுப்பி தங்கள் பிள்ளைகளின் தேர்வு முடிவுகளை வெளியிட ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

அதுமட்டுமல்லாது, கிராமப்புற மற்றும் நகர்புறங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் எவ்வகை நிபந்தனையும் இல்லாமல் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வங்கிகள் மூலம் கல்விக் கடன் கிடைக்க முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும்,”வழக்கமான கல்விக் கட்டணத்தில் பெருமளவு குறைத்துக்கொண்டு பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கும் ஏற்பாட்டையும் முதலமைச்சர் அவர்கள் செய்து தர வேண்டுமென்று” தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வேண்டிக்கொள்வதாகவும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்