Aran Sei

திருச்சி சிறை முகாமிலிலிருந்து விடுவிக்கக்கோரி 17 நாட்களாக ஈழத்தமிழர்கள் போராட்டம் – உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென பெ. மணியரசன் வேண்டுகோள்

திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘மாநில அந்தஸ்த்தை திரும்பத்தருவது; அரசியல் கைதிகளை விடுவிப்பது’ – பிரதமரிடம் 5 கோரிக்கைகளை வைத்த காஷ்மீர் தலைவர்கள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில் ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள்.இந்த 78 பேரும் உரிய கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையிலிருநது தமிழ்நாட்டிற்கு வந்த குற்றத்திற்காகவோ அல்லது சிறு சிறு குற்றங்களுக்காகவோ தளைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தண்டனைக் காலத்தை முடித்தவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இவர்களில் பலர்க்குத் தமிழ்நாட்டில் குடும்பங்கள் இருக்கின்றன; உறவினர்கள் இருக்கின்றனர். அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் இந்திய அரசால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்றும், சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை அக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டுமென்றும் பெ. மணியரசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் கடந்த 17 நாட்களாக முகாமிலேயே ஒன்றாக அமர்ந்து முழக்கமெழுப்பிக் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருவதாகவும், இவர்களில் இலங்கை அக்கரைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி 24.06.2021 அன்று உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட வரியை விட 87.5 விழுக்காடு வரியை குறைத்து தாக்கல் செய்த ரிலையன்ஸ் – சட்டத்தின் ஓட்டைகள் பயன்படுத்தப்படுகிறதா?

மேலும், “காத்திருப்புப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாடு அரசுத் தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கொன்றுவிட வேண்டும்; இந்த இரண்டில் ஒன்றைத் தமிழ்நாடு அரசு செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறிக் கொண்டு போராடி” வருவதாகவும் பெ.மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

எனவே, அது போன்ற பெருந்துயரங்கள் ஏற்படுவதற்கு முன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்துவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்