கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 700 தடுப்பூசி மையங்களை ஒடிசா அரசு மூடியுள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்குத் தேவையான அளவே மருந்து கையிருப்பு இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் எழுதியிருந்த கடித்ததில், ”ஏப்ரல் 7 ஆம் தேதி நிலவரப்படி, ஒடிசாவில் 5.34 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
”ஒடிசாவில் நாளொன்றுக்கு 2.5 லட்ச பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால், தற்போது இருக்கும் கையிருப்பை கொண்டு அடுத்த இரண்டு தினங்களை மட்டுமே சமாளிக்க முடியும். மொத்தமிருக்கும் 1400 தடுப்பூசி மையங்களில் 755 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டத்தில் 109 மையங்கள் மூடப்பட்டுவிட்டதாக மகாராஷ்டிராவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சூலே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
109 centers remained shut today because they had no stock of vaccines.Our momentum may be lost due to lack of stock,we remain determined to vaccinate every consenting person to save lives,to break the chain of infection and to get our economy back on its feet at the earliest..2/3
— Supriya Sule (@supriya_sule) April 7, 2021
இதே போன்று சத்தீஸ்கர் மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ”கடந்த இரண்டு நாட்களின் தரவுகளைப் பார்த்தால், தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கும். இதற்குக் காரணம் போதிய அளவில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாதது தான்” என அவர் தெரிவித்துள்ளார்.
Source : Scroll.in
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.