இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக என்று பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியைச் சுற்றிய போராட்டப் பகுதிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான சிஎன்என் செய்தியுடன் கிரேட்டா துன்பெர்க் விவசாயிகளுக்கான தனது ஆதரவை ட்வீட் செய்துள்ளார்.
We stand in solidarity with the #FarmersProtest in India.
https://t.co/tqvR0oHgo0— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
கிரேட்டா துன்பெர்க்கின் இந்த ட்வீட்டுக்கு 65,000-க்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன, அது 31,000-க்கும் அதிகமான தடவைகள் பகிரப்பட்டுள்ளது.
முன்னதாக, உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞர் ரிஹான்னாவும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு
“இது குறித்து (விவசாயிகள் போராட்டம் குறித்து) நாம் ஏன் பேசுவதில்லை?” என்ற ரிஹான்னாவின் ட்வீட்டுக்கு பதில் அளித்த பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத், ‘போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள்’ என்றும், ‘அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்’ என்றும் கூறியதோடு, பாடகர் ரிஹானாவை “முட்டாள்” என்று அழைத்திருக்கிறார். ரிஹான்னாவின் கணக்கை 10 கோடி பேர் பின் தொடர்கின்றனர், கங்கனாவின் கணக்கை 30 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
“அதைப் பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை என்றால், அவர்கள் விவசாயிகள் இல்லை, பயங்கரவாதிகள். பலவீனமான, பிளவுபட்ட நாட்டை சீனா கைப்பற்றி, சீன காலனியாக மாற்றும் வகையில் அவர்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.” என்று கங்கனா ட்வீட் செய்துள்ளார்.
No one is talking about it because they are not farmers they are terrorists who are trying to divide India, so that China can take over our vulnerable broken nation and make it a Chinese colony much like USA…
Sit down you fool, we are not selling our nation like you dummies. https://t.co/OIAD5Pa61a— Kangana Ranaut (@KanganaTeam) February 2, 2021
“வாயை மூடிக் கொண்டு உட்கார் முட்டாளே, உங்களைப் போன்ற அறிவிலிகளாக நாங்கள் நாட்டை விற்கவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் தீவிரமான ஆதரவாளரான கங்கனா, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து நிற்கும் விவசாயிகள் போராட்டத்தின் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தத் தயங்கியதில்லை என்று என்டிடிவி குறிப்பிடுகிறது.
விவசாயிகளின் போராட்டம் தவறாக வழிநடத்தப்படுகிறது, தவறான நோக்கம் கொண்டது, தேசிய நலனுக்கு எதிரானது என்று கங்கனா தொடர்ந்து முத்திரை குத்தி வருகிறார்.
டிசம்பர் மாதம் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர் பஞ்சாபி பாடகர் தில்ஜீத்துடன் ட்விட்டரில் மோதியது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் மீது அவதூறு – கங்கனா ராணாவத்தின் வாயை மூட வைத்த தில்ஜீத் – வீடியோ
கங்கனா, போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ 100 வாங்கிக் கொண்டு கலந்து கொள்கிறார்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டியதையும், போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு வயதான பெண்மணியை “ஷாகீன் பாக் தாதிகளில்” ஒருவரான பில்கிஸ் பானு என்று தவறாக அடையாளம் காட்டியதையும் தில்ஜீத் அம்பலப்படுத்தி, கங்கனாவை வாயடைக்கச் செய்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.