ஏரோ இந்தியா 2023-ல் பங்கேற்ற சூப்பர்சோனிக் விமானத்தின் வால் பகுதியில் இடம் பெற்ற கடவுள் அனுமனின் உருவ படம் சமூக ஊடகத்தில் வலுத்த எதிர்ப்பால் நீக்கப்பட்டது.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஏரோ இந்தியா 2023 என்ற பெயரில் விமான கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. ஆசிய அளவில் மிக பெரிய 14-வது விமான கண்காட்சியான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) சார்பில் எச்.எல்.எப்.டி.-42 என்ற சூப்பர்சோனிக் விமானம் ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அதன் வால் பகுதியில் கடவுள் அனுமனின் உருவப்படம் ஒன்றும் காணப்பட்டது. அதன் அருகில் புயல் வந்து கொண்டிருக்கிறது என்ற வாசகமும் எழுதப்பட்டு இருந்தது.
இந்த புகைப்படங்களை ஒன்றிய அரசின் சுரங்கம், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
எனினும், போர் விமானம் ஒன்றில் இந்து கடவுளின் படம் இடம் பெற்றிருப்பதற்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆயுதப் படைகள் எந்தவொரு மதம் சார்ந்த பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்க கூடாது. அது வீரர்களின் மனநிலையை பாதிக்கும் என்ற வகையிலான விமர்சனங்கள் எழுந்தன.
டெல்லி கலவரம்: அனுமன் ஜெயந்தி பேரணியில் வன்முறை, 9 பேர் கைது – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
இவற்றை கவனத்தில் கொண்ட இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உடனடியாக அந்த புகைப்படங்களை நீக்கி சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.