Aran Sei

கல்வி உதவித்தொகை பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் – தமிழக அரசுக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

டுக்கப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான  கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்  ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இந்திய ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்னேறிய பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டுக்கும் 8 லட்ச ரூபாய் ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எஸ் சி,எஸ்டி, ஓபிசி பிரிவினர் படிப்பு உதவித்தொகை (Scholarship ) பெறுவதற்கான வருமான வரம்பு மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது”. என்று கூறியுள்ளார்.

மேலும், ஆதிதிராவிட ர் மற்றும் பழங்குடி சமூகத்து மாணவர்களுக்கு
1.Pre-Matric Scholarship Scheme for STD IX & STD X SC/ST students; Government of India Post Matric Scholarship Scheme for SC/ST ;Higher Education Special Scholarship; Incentive for Full time Ph.D., Scholar;
State Special Post-Matric Scholarship (beyond X Std.) ஆகிய உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ” உதவித் தொகைகளைப் பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு இரண்டரை லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.அயல்நாட்டில் சென்று கல்வி பயில்வதற்கான ’ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்’ ( Overseas Scholarship ) பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது”.என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.

மேலும்,  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் ஆதிதிராவிட மாணவர்களுக்கான ‘ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தில் இதுவரை இரண்டு மாணவர்கள் மட்டுமே பயன் பெற்றுள்ளனர் என்று வேதனையோடு தெரிவித்தார். அதற்குக் காரணம் அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு மேல் போகக்கூடாது என நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, “பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ( ஓபிசி, எம்பிசி) மாணவர்களுக்கும்  மத்திய பல்கலைக் கழகங்களில் படிப்பதற்கான உதவித்தொகை முதலானவற்றைப் பெறுவதற்கு பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு 2 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது என வரம்பு  நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது”. என்றும் ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஆதிதிராவிட மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை நிர்ணயிப்பதென்பது அவர்களுக்கும் ‘கிரீமி லேயர்’  புகுத்துவது  போன்றதே,  அதனால்,  ஆதிதிராவிட மாணவர்கள் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட அனைத்துவிதமான படிப்பு உதவித்தொகைகளைப் பெறுவதற்கும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை முற்றாக நீக்கிட வேண்டும் என ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஓபிசி, எம்பிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகையையே ( தற்போது ஆண்டுக்கு 8 லட்சம்) படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பாகவும் நிர்ணயிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்