Aran Sei

‘பெண்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு’ – ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டுமென ராகுல்காந்தி அழைப்பு

ஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி, அவர்களை அவதூறு செய்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இதற்கு எதிராக அனைவரும் ஒரே குரலில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

‘சுல்லி டீல்ஸ்’: இணையத்தில் பதிவேற்றப்படும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் – பெண் பத்திரிகையாளர் புகார்

இதுதொடர்பாக, இன்று(ஜனவரி 2), ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இதற்கு எதிராக அனைவரும் ஒரே குரலில் நின்றால் மட்டுமே பெண்களுக்கு எதிரான அவமானங்களும் வகுப்புவாத வெறுப்பும் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், “ஆண்டு மாறிவிட்டது; நிலைமையும் மாறிவிட்டது. இப்போது நாம் பேசியாக வேண்டும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் – வழக்குப்பதிந்து செயலி, இணையதளத்தை முடக்கிய காவல்துறை

இந்த ட்வீட்டுடன், #நோஃபியர் என்ற ஹேஷ்டாக்கையும் இணைத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்