ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அம்மாநில அரசின் சட்டத்திற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இன்று(பிப்பிரவரி 3) தடை விதித்துள்ளது. மேலும், மாநில அரசிடம் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநில உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம், 2020-ஆனது, இந்த ஆண்டு ஜனவரியில் அமலுக்கு வந்தது. அதிகபட்ச மாதச் சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும் வேலைகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தும்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டு நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனம், வியாபாரம் நிறுவனம் அல்லது ஏதேனும் சேவையை வழங்கும் நிறுவனங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை சம்பளம் அல்லது ஊதியத்தில் அடிப்படையில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு இச்சட்டம் பொருந்தும் என்று மாநில அரசு கடந்த ஆண்டு கூறியிருந்தது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளை இச்சட்டம் திறக்கும் என்று மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.