Aran Sei

தனியார் துறையில் இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹரியானா அரசு மேல்முறையீடு

ரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் அம்மாநில அரசின் சட்டத்திற்குப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து ஹரியானா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஹரியானா அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் அவசரமாகப் பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்ததை அடுத்து, பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த வழக்கைப் பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

உள்ளூர் மக்களுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு: ஹரியானா அரசின் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

ஹரியானா மாநில உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம், 2020-ஆனது, இந்த ஆண்டு ஜனவரியில் அமலுக்கு வந்தது. அதிகபட்ச மாதச் சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும் வேலைகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தும்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார்த் துறை நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டு நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனம், வியாபாரம் நிறுவனம் அல்லது ஏதேனும் சேவையை வழங்கும் நிறுவனங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைச் சம்பளம் அல்லது ஊதியத்தில் அடிப்படையில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு இச்சட்டம் பொருந்தும் என்று மாநில அரசு கடந்த ஆண்டு கூறியிருந்தது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்