Aran Sei

’தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய உத்தரவிட வேண்ட்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் மனு

மிழக மீனவர்கள் நான்கு பேரை கொலை செய்த இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (பிப்பிரவரி 10) உச்ச நீதிமன்றத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கடல்சார் மக்கள் நலச் சங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், “கடந்த மாதம், தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடலுக்குள் மீன்படிக்கச் சென்றனர். ஆனால், அவர்கள் திரும்பி வரவில்லை. அதனைத் தொடர்ந்து, மற்ற மீனவர்கள் அளித்த தகவலின்படி, இலங்கைக் கடற்படையினர் கொலை செய்துவிட்டதாக அறிந்தோம்.” என்று புகாரளித்துள்ளனர்.

’தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள்; திராணி இல்லாத மத்திய அரசு’ – கொதிக்கும் மீன சங்கத்தினர்

“கடந்த மாதம் 21 ஆம் தேதி இந்தியக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இலங்கைக் கடற்படையின் மீது மீனவர்கள் படகு மோதிக் கடலில் மூழ்கிவிட்டது என்று இலங்கைக் கடற்படையினர் கூறினார்கள். இந்தச் சம்பவத்துக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.” என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடல்சார் வளங்களைப் பயன்படுத்துவதிலும், கடல் எல்லையைத் தீர்மானிப்பதிலும் தொடர்ந்து சிக்கல் எழுந்து வருகிறது என்றும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் உடைமைகளைப் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், தமிழக மீனவர்கள் நான்கு பேரைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் உயிரிழந்த தமிழக மீனவர்கள் குடும்பத்துக்குத் தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை – படகினை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மேலும், சில ஆண்டுகள் முன்னர் கேரளக் கடற்பகுதியில் இரு இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படையினர் சுட்டுக்கொன்றனர். அந்தக் கடற்படை அதிகாரிகளான சல்வடோர் கிரோனி, மசிமிலானோயி லட்டோர் ஆகிய இருவரையும் கேரளக் கடற்படையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவமும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்