அரசு வெளியிடும் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அர்த்தமற்றது. காரணம், ஆயிரக்கணக்கான கொரோனா தொற்றுகள் கணக்கிடப்படவோ அல்லது தொற்று சோதனைக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இன்று (மே 19), தனது டிவிட்டர் பக்கத்தில், “நேற்று இந்திய அரசானது, மொத்த மக்கள் தொகையில் 1.8 சதவீத மக்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதற்காக தன்னை தானே வாழ்த்திக்கொண்டது. டிசம்பர்-ஜனவரி மாதம் வரை அரசால் எடுக்கப்பட்ட சோதனை கணக்கெடுப்பின்படி, 21.4 சதவீத பெரியவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக கூறுகிறார்கள். இக்காலக்கட்டமானது கொரோனா இரண்டாவது அலைக்கு முந்தைய காலம்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Yesterday, GoI congratulated itself for containing spread of corona saying only 1.8% of population was affected
Govt’s own sero-survey from Dec-Jan found covid antibodies in 21.4% of adults surveyed. This was before the second wave, the number is only likely to be higher 1/2
— Asaduddin Owaisi (@asadowaisi) May 19, 2021
மேலும், “அரசாங்கத்தின் எண்ணிக்கைகள் அர்த்தமற்றது. காரணம், ஆயிரக்கணக்கான கொரோனா தொற்றுகள் கணக்கிடப்படவோ அல்லது தொற்று சோதனைக்கும் உட்படுத்தப்படவோ இல்லை. குறிப்பாக சொல்வதானால், கிராமப்புறங்களில் சுகாதார உள்கட்டமைப்பே முற்றிலும் இல்லாத நிலையில், இந்த அரசு தனது அரைகுறை எண்ணிக்கைக்குத் தன்னை தானே வாழ்த்திக்கொள்கிறது.” என்று அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.