அசாம் மாநிலம் சிப்சாகர் பகுதியின், சட்டமன்ற உறுப்பினரும், சமூக செயல்பாட்டாளருமான அகில் கோகோய் மீது மேலுமொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2019, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானார் என்று தேசிய புலனாய்வு முகமை, அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தது.
’என்னைக் கைது செய்ய அழுத்தம் தருகிறது அரசு’ – அசாம் முதல்வர் மீது அகில் கோகோய் குற்றச்சாட்டு
மேலும், ஏறத்தாழ 550 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர், கடந்த ஜூன் 25 அன்று அவருக்குத் தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் இரண்டு நாட்கள் பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அகில் கோகோய் மீதான வழக்கு இறுதி கட்ட த்தில் உள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை மேலுமொரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குற்றப்பத்திரிக்கையில் சாட்சியின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்படவில்லை என்றும், முன்பு தாக்கல் செய்த அதே குற்றப்பத்திரிகையைப் போல இதிலும் சாட்சியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் அகில் கோகோயின் ராய்ஜோர் தள் கட்சியின் பொறுப்புத் தலைவர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.