உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் வேளையில், அதிவேகமாக பரவக்கூடிய, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் புதிய வகையிலான (New strain) நோய்த்தொற்று இங்கிலாந்தில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘கொரோனா தடுப்பு மருந்து உங்களை முதலைகளாக மாற்றலாம்’ – மக்களை எச்சரித்த வலதுசாரி அதிபர்
இந்நிலையில், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்காக், புதிய வகையிலான கொரோனா நோய்த்தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை இங்கிலாந்தின் பல பகுதிகள் நான்காம் கட்ட பொதுமுடக்கத்துக்குச் செல்வதாக அறிவித்துள்ளார். தடுப்பு மருந்து வரும் வரை, நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது மிக கடினம் என மேட் ஹேன்காக் ஸ்கை நியூஸ் -க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரப்பியதாக அவதூறு : மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா
இங்கிலாந்தில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான கொரோனா நோய்த்தொற்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வகை வைரசால், கடந்த 28 நாட்களில் 35,928 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் 326 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
35,928 new positive cases, and 326 deaths within 28 days of a positive test, have been reported today across the UK.https://t.co/QriQqqkyse pic.twitter.com/QhJDH8O0X9
— Public Health England (@PHE_uk) December 20, 2020
இதையடுத்து அதிவேகமாக பரவி வரும் ”இந்த புதிய வகை கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டுவதாக இருக்கிறது. இந்த நிலைமை மோசமானே பின்பே சரியாகும். எனவே, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, நோய்த்தொற்றை பரவ விடாமல் கட்டுக்குள் வைக்க வேண்டும்” என இங்கிலாந்தின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்காக் தன் ட்விட்டர் பக்கத்தில் இங்கிலாந்து மக்களிடம் வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.
Today’s stark figures are very worrying.
This will get worse before it gets better – but it will get better.
We all need to do our bit to keep the virus under control while we accelerate the vaccination programmehttps://t.co/Js3uGtYulX
— Matt Hancock (@MattHancock) December 20, 2020
இந்த புதிய வகை நோய்த்தொற்றின் காரணமாக இங்கிலாந்தில் மட்டும் சுமார் 16 லட்சம் மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்த நோய்த்தொற்று அதிவேகத்தில் பரவுவதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ”ஒரு பிரதமராக, மக்களை பாதுகாப்பதற்கு, சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. புதிய வகையிலான மிகவும் அபாயகரமான கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதால், நாம் திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை கொண்டாட முடியாது” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
As Prime Minister, it is my duty to take the difficult decisions, to do what is right to protect the people of this country. (1/3)
— Boris Johnson (@BorisJohnson) December 19, 2020
நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகள் இங்கிலாந்தில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவில் வருகின்ற புதன்கிழமையிலிருந்து இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய வகை கொரோனா நோய்த்தொற்று குறித்து இந்திய அரசு விழிப்போடு இருப்பதாகவும், இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் பரவி வந்த புதிய வகை நோய்த்தொற்றினால் இத்தாலியில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து இத்தாலி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தொடர் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் – கொரோனாவே காரணம் என்கிறது மத்திய அரசு
கொரோனா நோய்த்தொற்றால் இதுவரை இங்கிலாந்தில் ஏறக்குறைய 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 67,503 பேர் பலியாகியுள்ளதாகவும் ட்ரிபியூன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. புதிய வகையிலான கொரோனா நோய்த்தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனத்திடம் இங்கிலாந்து தகவல் அளித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.