சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஷ் கான் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு அனிஷ் கானின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
பிப்பிரவரி 18ஆம் இரவு காவல்துறை சீருடையுடன் கானின் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள், அனிஷ் கானை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்று கீழே தள்ளியது தான் உயிரிழப்பிற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
காவல்துறையைச் சேர்ந்த யாரும் அனிஷ் கானின் வீட்டிற்கு செல்லவில்லை என்றும் அனிஷ் கான் அவரது வீட்டின் அருகில் இறந்து கிடந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கானின் மர்ம மரணத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர் அமைப்புகள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து பிப். 21, ஹவுரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ள மம்தா பானர்ஜி, “அனிஷ் கானின் மரணம் குறித்து விசாரிக்க, காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார்கள். தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருக்கும் கானின் தந்தை, “எஸ்.ஐ.டியின் விசாரணையில் நான் மகிழ்ச்சியடையவில்லை. நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை வேண்டும்” என கூறியுள்ளார்.
Source : New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.