மத்தியப்பிரதேச மாநில நீமுச் மாவட்டத்தில் எட்டு பேர் கொண்ட கும்பலால் பழங்குடியினச் சமுகத்தைச் சார்ந்த கண்ஹையாலால் பீல், மரணமடைந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பழங்குடியின சமுகத்தைச் சார்ந்த கண்ஹையாலால் பீல், அந்தப்பகுதி வழியாக வந்த குஜ்ஜார் சமுகத்தைச் சார்ந்த பால்காரின் இருசக்கர வாகனம் மோதியது. இதனைதொடர்ந்து, அவர் வண்டியில் இருந்த பால் கொட்டியதில் ஆத்திரமடைந்த அவர் கண்ஹையாலாலை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், “கண்ஹையாலால் பீல் நீச்-சின்கோலி சாலையில் நின்றுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பால்காரர் சித்தார் மால் குர்ஜார் வாகனம் மோதியுள்ளது. அவரது வாகனத்தில் இருந்த பால் கொட்டிவிடவே, அவர் பீலைத் தாக்கியுள்ளார”. என்றும் கூறியுள்ளனர்.
மேலும், அவரது நண்பர்களுக்கு அழைத்து பீலை கயிற்றால் பிணைத்து வாகனத்தின் பின்புறம் கட்டி இழுத்து சென்றதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து , மருத்துவமனையில் மனையில் அனுமதிக்கப்பட்ட கண்ஹையாலால் கடந்த ஆகஸ்ட் 27 அன்று உயிரிழந்துள்ளார்.
मध्य प्रदेश के नीमच जिले में आदिवासी वर्ग के श्री कन्हैयालाल भील की मामूली बात पर की गई पिटाई व फिर उसे गाड़ी में बाांधकर घसीटने से हुई मौत दिल दहलाने वाली मॉब लिंचिंग की यह घटना अति-निन्दनीय। सरकार दोषियों को सख्त सजा दे, बीएसपी की यह माँग।
— Mayawati (@Mayawati) August 29, 2021
இந்நிலையில், “இந்த கும்பல் கொலை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை அரசு தண்டிக்க வேண்டும் என்று கோருகிறோம்” என்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.