Aran Sei

பலரின் உயிர் காத்த முகமது அலி ஜின்னா – சென்னை காவல் ஆணையர் பாராட்டு

நெரிசலில் சிக்கித்தவித்த ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி உதவிய முகமது அலி ஜின்னா என்பவருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்

கடந்த 30.12.2021 அன்று பெய்த கனமழை காரணமாக அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்திருக்கிறது. இதைக் கண்ட இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது அலி ஜின்னா என்பவர் அவரது இருச்ககர வாகனத்தை ஓரம் நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னால் இருந்த வாகனங்களை சிறிது சிறிதாக நகர்த்தச் சொல்லி ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட்டுக் கொண்டே நெடுந்தூரம் நடந்தே சென்று 3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து செல்ல உதவியுள்ளார்.

பாரிமுனை IDFC தனியார் வங்கியில் மேலாளராக முகமது அலி ஜின்னா  வேலை செய்து வருகிறார். இவர் சமூக சேவகர் என்பதும், கடந்த 8 ஆண்டுகளாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரவு 10.00 மணிமுதல் அதிகாலை 02.00 மணி வரையில் அவசர சிகிச்சை பிரிவில் விபத்து மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர்  சங்கர் ஜிவால் இ.கா.ப., அவர்கள் முகமது அலி ஜின்னாவை இன்று நேரில் அழைத்து அவரது சேவையை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்