சார்பின்மை மற்றும் நடுநிலையை கடைப்பிடிக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டபேரவை தேர்தலானது, மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
மத்திய ஆயுதப் படைகளுக்கு எதிராக கருத்துக்கள் கூறியதாகவும் வாக்காளர்களிடையே மதரீதியிலான பிளவை ஏற்படுத்த முயன்றதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 13) திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நேர்மையான முறையிலும் நியாயமான முறையிலும் நடத்தப்படும் தேர்தல்களில்தான் நம்முடைய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை நிலைகொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
The faith in our democracy rests on free and fair elections.
The Election Commission of India must ensure a level playing field for all parties and candidates and ensure that impartiality and neutrality is maintained.#MamataBanerjee
— M.K.Stalin (@mkstalin) April 13, 2021
“எனவே, அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் வழங்குவதை உறுதிசெய்வது மட்டுமின்றி, சார்பின்மை மற்றும் நடுநிலையை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தன் மீதான நடவடிக்கையானது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து இன்று (ஏப்ரல் 13) கல்கத்தாவின் காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.