பாடகர் மீது #ME TOO எதிர்ப்பு இயக்கத்தின் வழியே குற்றம் சாட்டிய பாடகி போலியாகக் குற்றம்சாட்டியதால் 3 ஆண்டு சிறைதண்டனை பெற்றார் என வெளியான செய்தி பொய் என்று அந்தப் பாடகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகில் குழந்தை திருமணம் செய்யும் மூன்றில் ஒருவர் இந்தியர் – யுனிசெஃப் தகவல்
கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த பாடகி மீஷா சபி, தன் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அலி ஜாபர் மீது #ME TOO பதிவின் வழியே குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் மீஷா சபி போலியாகக் குற்றம் சாட்டியதால் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார் என்று டெய்லி மெயில் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி பொய் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் , ” வன்கொடுமைக்கு ஆளானதை குறித்து பேசுவது மிகவும் கஷ்டமானது. இதனால் தான் பலர் வலியோடு அமைதியாக இருந்துவிடுவதாகவும், துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு குரல் எழுப்புவது நாளை நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் ” என்று மீஷா சபி தெரிவித்துள்ளார்.
மேலும், தான் சிறையில் அடைக்கப்படவில்லை என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
Sharing this because I believe that by speaking out about my own experience of sexual harassment, I will break the culture of silence that permeates through our society. It is not easy to speak out.. but it is harder to stay silent. My conscience will not allow it anymore #MeToo pic.twitter.com/iwex7e1NLZ
— MEESHA SHAFI (@itsmeeshashafi) April 19, 2018
கடந்த ஏப்ரல் 19,2018 ஆம் ஆண்டு பாடகி மீஷா சபி பாடகர் அலி ஜாபரின் மீது உலகளாவிய #ME TOO இயக்கத்தின் கீழ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது பாகிஸ்தான் முழுவதும் பெரும் அதிர்வலைகலை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.