இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டபேரவை தேர்தலானது, மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
மத்திய ஆயுதப் படைகளுக்கு எதிராக கருத்துக்கள் கூறியதாகவும் வாக்காளர்களிடையே மதரீதியிலான பிளவை ஏற்படுத்த முயன்றதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளது.
To protest against the undemocratic and unconstitutional decision of the Election Commission of India, I will sit on dharna tomorrow at Gandhi Murti, Kolkata from 12 noon.
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2021
இந்நிலையில், இதுதொடர்பாக, நேற்று (ஏப்ரல் 13) இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பிற்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்து, நாளை (ஏப்ரல் 13) மதியம் 12 மணியில் இருந்து கல்கத்தாவின் காந்தி மூர்த்தியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்.” என்று அறிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.