மத்தியபிரதேசத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலமான தேவாலயத்தை தீ வைத்து எரித்துவிட்டு சுவரில் ‘ராம்’ என்று எழுதி வைத்து தப்பியோடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் நர்மதபுரம் மாவட்டம் சிக்குபுரா கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தலமான தேவாலயம் உள்ளது. பழங்குடியினர் பெரும்பான்மையாக கொண்ட இந்த பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தலத்தில் பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.
பிப்ரவரி 13 ஆம் தேதி இந்த கிறிஸ்தவ மதவழிபாட்டு தலத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தலத்தை சூறையாடிய அந்த கும்பல் அங்குள்ள சுவற்றில் ‘ராம்’ என்று எழுதி வைத்து விட்டு தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆவேஷ் பாண்டே, ஆகாஷ் திவாரி மற்றும் சிவா (மத்தியபிரதேசம்) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஆகாஷ் திவாரி என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆவேஷ் மற்றும் சிவாவுக்கு பணம் அனுப்பி இவ்வாறான மத வழிபாட்டுத்தலங்களில் தாக்குதல் நடத்தும்படி ஆகாஷ் திவாரி உத்தரவிட்டு வந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.