மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களை, அரசின் பல்வேறு துறைகளில், சிக்கலான காலகட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளில் (இணைச் செயலாளர், இயக்குநர்) நியமிக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது இதற்காகச் சமூகநீதிப் போராளிகள் கண்டித்து குரல் எழுப்ப வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரியுள்ளார்.
அதிகாரிகள் மட்டத்திலும் தனியார்மயம் – செயலாளர்களாக தனியார் நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சமூகநீதியை ஒழித்துக் கட்டுவதில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கண்ணுங்கருத்துமாய் இருந்து, இட ஒதுக்கீட்டை – அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை அறவே பறிக்கும் செயல்களை – தமது ஆட்சிக்குள்ள ‘‘ரோடு ரோலர்’’ மெஜாரிட்டியைப் பயன்படுத்தி செய்து – இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே உடைத்து வருவது கண்கூடு” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்வி, உத்தியோக நியமனங்களில் காலங்காலமாய் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர் இட ஒதுக்கீடு காரணமாகப் பெற்று வரும் சமூகநீதி நாளும் பல்வேறு துறைகளில் அதிரடியாகச் சிதைக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், மத்திய அரசின் முக்கிய இலாக்காக்களை நிர்வகிக்கும் கூட்டுச் செயலாளர்கள் (Joint Secretary) என்ற பொறுப்பிற்கு முப்பது பேரை, தனியார் துறையிலிருந்தும், வெளியிலிருந்தும் மத்திய அரசே தேர்வு செய்து நேரடியாக நியமனம் செய்வார்கள்” என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் கூறியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய வம்சாவளியினரின் உணவு உபசரிப்பு: இது ஒன்றே போதுமானது – மியா காலிஃபா நெகிழ்ச்சி
”அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 315 இன் கூற்றுப்படி (Article 315) மத்திய – மாநில அரசுகளின் அதிகாரிகள் நியமனங்களை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனோ அல்லது மாநில சர்வீஸ் கமிஷனோதான் நியமிக்க வேண்டும். அதுதான் சட்ட விதிமுறை. அதன்படிதான் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்ற முக்கிய நிர்வாகப் பதவி களுக்கு அந்தந்த சர்வீஸ் கமிஷன் தனியே சுதந்திரமாகத் தேர்வு முறை – அதன்பிறகு நேர்காணல் முறை வைத்து, அப்படி தேர்வு செய்யப் பெற்றவர்களும்கூட பிறகு அவர்களுக்கென உள்ள பயிற்சிப் பள்ளிகளில் (டேராடூன் பள்ளி போன்றவை) பயிற்சி முடித்து, ஒதுக்கப்பட்ட பதவிகளில் சேர்ந்து, படிப்படியாகத் துணைச் செயலாளர் தொடங்கி மேலே பதவி உயர்வு பெறுவார்கள்” என்று வீரமணி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் – மாநிலத்திற்கு அதிகரித்த நிதிச்சுமை
முந்தைய முறையான பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நியமனங்களில் – சமூகநீதி – இட ஒதுக்கீடு முறை உண்டு. மண்டல் பரிந்துரை ஆணைகளாக்கப்பட்டு 1993 முதலே – அதற்கு முன்பே எஸ்.சி., எஸ்.டி., இவர்களுக்கு மத்திய அரசில் 22.5 சதவிகிதம் (15, 7.5)- 23 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதம் என்ற இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டது. இதுவரை வாய்ப்புக் கிட்டாத ஒடுக்கப்பட்டோர் நிர்வாகத்தில் பங்கு பெறும் வாய்ப்பு ஏற்பட்டதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்
”அவற்றைப்பற்றியெல்லாம் கவலை இல்லாமல் – ‘‘கண்டதே காட்சி கொண்டதே சட்டம்‘’ என்ற நிலையில், நாட்டில் நிர்வாகம் இப்படி அரசமைப்புச் சட்ட விதிகளையே புறந்தள்ளும் போக்கும் ஒரே கல்லில் தனக்கு வேண்டியவர்களாகவோ, தனது கட்சி, கொள்கை உணர்வாளர்களாகவோ அல்லது தனக்குத் தலையாட்டும் தம்பிரான்களையோ அத்தகைய ‘‘திடீர் நுழைப்பாளர்கள்’’ ஆவதற்கு இதன்மூலம் வாய்ப்பு ஏற்படும்” என்று கூறியுள்ளார்.
தொலைநோக்கு எண்ணம் கொண்ட துடிப்பான தலைவர் மோடி: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்
இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் இதனை மக்கள் தலைவர்களும், சமூகநீதிப் போராளிகளும் கண்டித்துக் குரல் எழுப்பி, அரசமைப்புச் சட்ட விழுமியங்களும், கொள்கைகளும் பறிக்கப்படாமல் தடுக்க முன்வரவேண்டியது அவசரம் – அவசியம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.