Aran Sei

உத்தரகாண்ட் கொரோனா போலி பரிசோதனைகள் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு பிணையில் வெளிவர முடியாத வகையில் வாரண்ட்

ரித்வார் கும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்கள்மீது பிணையில் வெளிவர முடியாத வகையிலான வாரண்ட் வழங்கி ஹரித்வார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரகண்ட் மாநில ஹரித்வார் கும்பமேளாவின் போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளில் மோசடி நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கை விசாரிக்க, ஜூன் 18 அன்று  ஹரித்வார் மாவட்ட காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.

ஜூன் 17 ஆம் தேதி, ஹரித்வார் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியின் புகாரின் பேரில், அம்மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீஸ் நிறுவனம் (எம்.சி.எஸ்), டெல்லியைச் சேர்ந்த லால் சந்தானி ஆய்வகம், ஹிசாரை சேர்ந்த நல்வா ஆய்வகம் ஆகிய இரண்டு ஆய்வகங்கள் மீது கொரோனா சோதனைகளில் மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சம் கொரோனா பரிசோதனைகளில், 90,000 பேருக்கு தொற்று இல்லை என்று சான்று அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள், ஏறத்தாழ 36,000 சான்றுகள் போலியானவை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸின் இரண்டு பங்குதாரர்களான சரத் மற்றும் மல்லிகா பந்த், நால்வா லேப்ஸின் பங்குதாரர் ஆகிய மூவருக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத வகையிலான வாரண்டுகளை பெற சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) திட்டமிட்டிருந்தது.

இதுதொடர்பாக, ஆகஸ்ட் 9 அன்று பேசிய சிறப்பு விசாரணைக் குழுவை சேர்ந்த அதிகாரி,  “தற்போது, ​​அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களின் அலைபேசிகளும் அணைக்கப்பட்டுள்ளன. நாங்கள் பிணையில் வெளிவரமுடியாத வகையிலான வாரண்டுகளை நீதிமன்றத்தில் கோர திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறியிருந்தார்.

மறுபுறம், கும்பமேளாவில் கொரோனா கண்டறிவதில் போலியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது தனது பதவிக்காலத்திற்கு முன்னர் என்றும், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் முந்தைய உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் தெரிவித்த நிலையில், அவருக்கும் முந்தைய முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், விசாரணை ஒருதலைபட்சமாக நடக்கலாம் என்றும் நீதிதுறை விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். தற்போது, புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக உள்ளார்.

ஹரித்வார்  கும்பமேளாவில் நடத்தப்பட்ட போலி கொரோனா பரிசோதனை மோசடிகள் தொடர்பாக, டெஹ்ராடூன், ஹரித்வார், டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள நோவஸ் பாத் லேப்ஸ், டிஎன்ஏ லேப்ஸ், மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ், டாக்டர்.லால்சந்தனி லேப், நால்வா லேப்ஸ் ஆகியவற்றின் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதுதொடர்பாக, அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை, “30.9 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள், போலியான பில் மற்றும் குற்றத்திற்கு ஆதாரமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போலியான அலைபேசி எண்கள் மற்றும் போலியான முகவரிகளை ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 26 அன்று, கும்பமேளா அலுவலர்  ([மருத்துவம் மற்றும் உடல்நலன்) மருத்துவர் அர்ஜுன் சிங் மற்றும் பொறுப்பு அலுவலர்   (மருத்துவம் மற்றும் உடல்நலன்) என்.கே. தியாகி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28), ஹரித்வார் நிதீமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவின் கோரிக்கையை ஏற்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் பிணையில் வெளிவர முடியாத படியான வாரண்ட்டை வழங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய சிறப்பு விசாரணைக் குழுவை சேர்ந்த அதிகாரி,  “மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் மற்றும் நல்வா லேப்ஸ்ஸின் இரண்டு பங்குதாரர்களான ஷரத் பந்த், மல்லிகா பந்த் மற்றும் டாக்டர் நவ்தேஜ் நல்வா ஆகியோருக்கு வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 28), உத்தரகண்ட் மாநில அரசு மருத்துவர்கள் சங்கம், கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்ட போலி கொரோனா பரிசோதனை விவகாரத்தில் உயர் மட்ட நீதி விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இவ்விவகாரத்தில் விசாரணை அதிகாரிகளால், கொரோனா பரிசோதனை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 22000 க்கும் மேற்பட்ட அலைபேசி எண்களை சரிபார்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

Source: New Indian Express

தொடர்புடைய பதிவுகள்:

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள் – இருஅதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவு

உத்திரபிரதேசத்தில் 2019 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெற்றதில் ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்