2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நடிகை, நடிகர் திலீப் மீதான அவ்வழக்கை மேலும் விசாரிக்கக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தனது வேதனையை வெளிப்படுத்தியதுடன், தனக்கு நீதி கிடைக்க உதவுமாறும் அந்நடிகை வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு சிறப்பு அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் இவ்வழக்கு விசாரணையின் போது ஒன்றன் பின் ஒன்றாக ராஜினாமா செய்வதனர் என்றும் இவ்விலகலுக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்றும் அந்நடிகை முதலமைச்சரை கோரியுள்ளார்.
“எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண் போகாமல் இருக்க, திறமையான சிறப்பு அரசுத்தரப்பு வழக்கறிஞரை விரைவில் நியமிக்க வேண்டும். திலீப் மீது இயக்குனர் பாலச்சந்திர குமார் எழுப்பிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏன் எதுவும் செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும். எனக்கு நீதி வேண்டும்” என்று அந்நடிகை கூறியுள்ளார்.
இக்கடிதத்தின் நகலை கேரள மாநில காவல்துறை தலைவருக்கும் அனுப்பியுள்ளார்.
தற்போது வரை, முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகத்தில் இருந்து இக்கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாதிப்புக்குள்ளான மலையாள நடிகையை, நடிகர் திலீப் கடத்தித் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், திலீப் உள்ளிட்ட உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
நடிகர் திலீப் பிணையில் விடுதலையானார். இவ்வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் திலீப்பின் நண்பரும், மலையாள இயக்குனருமான பாலச்சந்திரன் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட்சிகளை திலீப் உள்பட அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்தது தனக்கு தெரியும் என்று கூறியிருந்ததைத் தொடர்ந்து, பாதிப்பிற்குள்ளான அந்நடிகர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.