Aran Sei

‘கனமழை தொடர்வதால் வக்பு வாரிய தேர்வை ஒத்திவைக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வேண்டுகோள்

னமழை தொடர்ந்து பெய்து வருவதால் நடைபெறவுள்ள தமிழ்நாடு வக்பு வாரிய பணியாளர்கள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, இன்று(நவம்பர் 9), எம். எச். ஜவாஹிருல்லா  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு வக்பு வாரிய பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் எழுத்து தேர்வு வரும் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு ஆன்லைன் தேர்வு என்றாலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று அங்குத் தேர்வுகளை எழுத வேண்டும் என தமிழ்நாடு வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

‘இந்தி தெரியாது; மாநில மொழி தெரிந்தவரே தலைமைச் செயலாளராக வேண்டும்’ – அமித் ஷாவுக்கு மிசோராம் முதல்வர் கடிதம்

தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையும் அதனை தொடர்ந்து வெள்ளப்பெருக்கும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 10ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை கனமழை நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக அரசு நவம்பர் 13ம் தேதி அன்று நடைபெறவுள்ள தேர்வை ஒத்திவைத்து வேறொரு நாளில் தேர்வை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா  தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்