Aran Sei

மே தினத்திற்கு விடுமுறை இல்லையா? – வைகோ ஆவேசம்

பொன்மலை இரயில்வே பணிமனையில் ‘மே தின’ விடுமுறை கிடையாது என அறிவித்ததைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உலகம் முழுவதும் மே முதல் நாள், தொழிலாளர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 இல் முதல்வர் பொறுப்பு ஏற்றபோது, தொழிலாளர் உரிமைத் திருநாளான மே 1 ஆம் தேதி, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துப் பெருமை சேர்த்தார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பு ஏற்ற கலைஞர் அவர்கள் மே நாள் விடுமுறை தொடர்வதற்கு உத்தரவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

‘பாஜகவின் மிரட்டல்களால் என்னைப் பணிய வைக்க முடியாது’ – காஷ்மீர் தலைவர் மெஹபூபா முப்தி

1990 ஆம் ஆண்டு மே நாளின் நூறாவது ஆண்டு விழாவை, உலகம் முழுமையும், தொழிலாளர்கள் வெகு உற்சாகத்தோடு கொண்டாட ஏற்பாடுகள் செய்தபோது, அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் முன்னிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவர் பேசியதையும், இந்தியா முழுமையும் மே நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரியத்தையும்  நினைவுகூர்ந்தார். .

பாராளுமன்ற அவர் பேசியபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா, ஜனதா தளத்தைச் சேர்ந்த கமல் மொரார்கா ஆகியோர் ஆதரித்துப் பேசியதையும் உடனே பிரதமர் வி.பி.சிங் மே நாளுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளித்து, 1990, மே முதல் நாள் நடைமுறைக்கு வந்ததையும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் – “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் ” : குடிமக்கள் குழு

தற்போதைய பாஜக அரசு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றது என்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, 44 சட்டங்களை 4 தொகுதிகளாக மாற்றுவதற்கு முனைந்து வருகின்றது என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

“தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேரம் வேலை என்பதை பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மாநிலங்களில் 12 மணி நேரமாக அதிகரித்து, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதே ஏதேச்சதிகார முயற்சியில் மத்திய பாஜக அரசும் ஈடுபட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

டெல்லி நோக்கி விவசாயிகள் : மீண்டும் போலீசின் கண்ணீர் புகைக்குண்டு, தண்ணீர் பீரங்கி, லத்தி

“இரயில்வே துறையில் தொழிலாளர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில், இது வரையில் மே நாளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறையை இரத்து செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இதனை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2021 விடுமுறை நாள் பட்டியலில் மே தினத்திற்குப் பொது விடுமுறை நாள் உண்டு என, பொன்மலை இரயில்வே பணிமனை நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்