“சாக்கலேட் தொழிற்சாலைகள் எவ்வளவு பாதுகாப்பானவையோ அவ்வளவு பாதுகாப்பானவை அணு உலைகள்” என்று செர்னோபில் அணு உலைகளின் நிர்வாக அதிகாரி சொல்லி ஒரு வாரம் கழித்து செர்னோபில் அணு உலை விபத்து நடந்தது. செர்னோபில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த பகுதி. இன்றைய உக்ரைனின் தலைநகர் கீவில் இருந்து 130 கிமீ தொலைவிலும் பெலாரஸ் நாட்டில் இருந்து 20 கிமீ தூரத்திலும் உள்ளது. செர்னோபில் அணு உலை விபத்தில் சில நூறு பேர் மரணம் அடைந்தனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டு நகரங்களிலும், நூறு கிராமங்களிலும் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஐரோப்பிய நாடுகளான பெலாரஸ், ரஷியா, உக்ரைன் போன்ற நாடுகளில் அணுக்கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. செர்னோபில் விபத்து அரசியலில் ஏற்படுத்திய தாக்கமும் அதிகம். சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் செர்னோபில் அணு உலை விபத்தின் பங்கு பெரேஸ்ட்ராய்க்காவின் பங்கைவிட அதிகம் என்று மிகையில் கோர்பச்சேவ் சொன்னார். அன்றைய அதிபர் மிகையில் கோர்பச்சேவ் கம்யூனிஸ்ட் கட்சியில் சீர்திருத்தம் செய்யக் கொண்டு வந்த திட்டம் தான் பெரேஸ்ட்ராய்க்கா.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.