Aran Sei

இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்க கூடாது – மலாலா யூசுஃப்ஸை

இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்க கூடாது என்று நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மலாலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்க கூடாது.

ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்லும் பெண்களை அனுமதிக்க மறுப்பது கொடுமையானது.

படிப்பிற்கும் ஹிஜாபிற்கும் இடையே ஒன்றை தேர்வு செய்யும்படி நம்மை கல்லூரிகள் கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக ‘கம்யூனல் வைரஸ்’: தமிழ்நாட்டில் பரவாமல் நடவடிக்கை எடுங்கள் – தமிழக அரசுக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

கர்நாடகாவின் உடுப்பி, சிக்கமகளூரு, மாண்டியா மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனக் காவி துண்டு அணிந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாண்டியாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவியைக் காவி துண்டு அணிந்த கூட்டம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட, அதற்குப் பதிலாக அல்லாஹு அக்பர் என அந்த பெண் முழக்கமிட்டார்.

ஷிமோகா நகரில் கல்லூரி ஒன்றில் தேசியக் கொடி இருக்கும் இடத்தில் காவிக் கொடியை சில மாணவர்கள் ஏற்றினர். இதனால், சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில்தான், கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்