தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப்பிரதேசம் வரை எங்கும் ‘அதானி’ என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ‘அதானி’, ‘அதானி’, ‘அதானி’ தான்… அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், ஆனால் தோல்வியடைய மாட்டார். இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். பிரதமர் மோடிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு? ஒவ்வொரு தொழிலிலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்று மக்களவையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கிய நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில், அதானி குழும பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயன்றனர்.
நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார் – ராகுல்காந்தி
அதற்கு கேள்வி நேரத்தை பயன்படுத்துமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர். இதனால், அவை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஒரு மணி நேர ஒத்திவைப்புக்கு பின்னர் மக்களவையில் அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின.
பாஜக மக்களவை உறுப்பினர் சி.பி.ஜோஷி, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார். முன்னதாக, துருக்கி – சிரியா பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவை உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சி.பி.ஜோஷி வாசித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மையத்திற்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, மதியம் 1.30 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
இதனையடுத்து தொடங்கிய மக்களவையில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்தி, “இந்திய ஒற்றுமை யாத்திரையின் (பாரத் ஜோடோ யாத்ரா) போது நாங்கள் நாடெங்கிலும் உள்ள மக்களின் குரல்களைக் கேட்டோம், யாத்திரையில் தொடக்கத்தில் சிறிது கடினமாக இருந்தது. அதே நேரத்தில் யாத்திரையின் போது குழந்தைகள், பெண்கள், முதியவர்களிடம் அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தோம்.
ஒற்றுமை யாத்திரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினர். அவர்கள் வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர். அவர்களின் நிலம் பறிக்கப்படுகிறது, பழங்குடியினர் மசோதா பற்றி கேள்வி எழுப்பினர்.
அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் மீது திணிக்கப்படுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். வேலையிலிருந்து பலர் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்தனர். வேலை கிடைக்காதவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டி இருந்தது. மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், பின்னர் மீண்டும் சமூகத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், இது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் அக்னிவீர் திட்டத்தைப் பற்றியும் பேசினர், ஆனால் இந்திய இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களை வெளியேறச் சொன்னதைப் பற்றி எங்களிடம் கூறினார். அக்னிவீர் யோஜனா ஆர்எஸ்எஸ் உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்தது என்றும் ராணுவத்திலிருந்து அல்ல என்றும் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் (ஓய்வு பெற்ற அதிகாரிகள்) தங்கள் மனதில் அக்னிவீர் திட்டம் ராணுவத்திலிருந்து வரவில்லை என்றும், என்எஸ்ஏ அஜித் தோவல் அந்த திட்டத்தை ராணுவத்தின் மீது வற்புறுத்தினார் என்றும் கூறுகின்றனர்.
குடியரசுத் தலைவர் உரையில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற வார்த்தைகள் இல்லை. தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப்பிரதேசம் வரை எங்கும் ‘அதானி’ என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ‘அதானி’, ‘அதானி’, ‘அதானி’ தான்… அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், ஆனால் தோல்வியடைய மாட்டார். இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். பிரதமருக்கும் அதானிக்கு என்ன தொடர்ப்பு? ஒவ்வொரு தொழிலிலும் எப்படி வெற்றி பெறுகிறார்.
அதானி இப்போது 8-10 துறைகளில் இருக்கிறார் என்றும், 2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலரை எட்டியது எப்படி என்றும் இளைஞர்கள் எங்களிடம் கேள்வி எழுப்பினர்.
காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் முதல் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நாம் நடந்து செல்லும் சாலைகள் வரை அதானி விவகாரம் மட்டுமே பேசப்படுகிறது” என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.
Source : the quint
Kalaignar is an Inseparable Part of Tamilnadu – Dr Kantharaj | Karunanidhi Pen Statue | Seeman | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.