Aran Sei

தமிழ்நாட்டில் கோட்சே நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்

மிழ்நாட்டில் கோட்சே நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசத்தந்தை மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சே 1949 நவம்பர் 15ல்குற்றம் நிரூபிக்கப்பட்டு அரியானா மாநிலம் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்துஇந்திய நாட்டிற்குக் காந்தி தேசம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தந்தை பெரியார்அவர்கள் கோரிக்கை வைத்தார். அந்த அளவிற்கு மகாத்மா காந்தியைப் போற்றும் தமிழகமண்ணில் கோட்சே தூக்கிலிடப்பட்ட  தினத்தில் திருப்பூர் சிவசேனா அலுவலகத்தில்யுவ சேனா அமைப்பின் சார்பில் வீரவணக்க நாள் கொண்டாடி இருப்பது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது.
சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் தமிழகத்தின் சமூக நல்லிணக்கபண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கும் வகையிலும் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம்தமிழகத்தின்  தத்துவார்த்த சிந்தனையைச் சிதைக்கும் முயற்சியாகும்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கடும் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இது போன்ற செயலை இனி யாரும் செய்யக் கூடாது என்கிறஉணர்வைத் தமிழக அரசும் காவல்துறையும் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக மனிதநேய மக்கள்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்