Aran Sei

பாஜக அரசால் வீழ்த்தப்பட்ட செங்கல்பட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் வரலாறு – சூர்யா சேவியர்

1966ல் இந்திரா காந்தி அம்மையார் முதன்முறை பிரதமராக இருந்தபோது,
அவரது அமைச்சரவையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் மருத்துவர் சுசீலா நய்யார்.

மருத்துவர் சுசீலா நய்யார், அண்ணல் காந்தியடிகளின் மருத்துவர் ஆவார்.
இவரது காலகட்டத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே இந்த HLL நிறுவனம் ஆகும்.

HLL பயோடெக் நிறுவனமானது, HLL லைப்கேர் (HLL Lifecare) என்ற கேரள அரசுக்கு சொந்தமான (State owned) ஒன்றியப் பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். இந்த HLL லைப்கேர் நிறுவனம் என்பது முன்னாள் ஹிந்துஸ்தான் லேடக்ஸ் (Hindustan Latex Limited) நிறுவனமே ஆகும்.

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

நிரோத், உஸ்தாத், மூட்ஸ், மாலா-டி (Mala-D) போன்ற கருத்தடை சாதனங்கள் இந்த HLL-ன் புகழ்பெற்ற தயாரிப்புகள் ஆகும். ஆரம்பத்தில் கருத்தடை சாதனங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்திய இந்த HLL நிறுவனம் பின்னர் படிப்படியாக பிற துறைகளிலும் கவனம் செலுத்தியது. குறிப்பாக 2005 முதல் அமெரிக்காவின் அக்யூமென் (Acumen) நிறுவனத்துடன் இணைந்து “லைப்ஸ்பிரிங் ஹாஸ்பிடல்ஸ்” (Lifespring) என்ற 20 பிரசவ ஆஸ்பத்திரிகளை தெலங்கானாவில் நடத்திவருகிறது.

கடந்த 2014 பிப்ரவரியில் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது, இந்த HLL நிறுவனமானது, கோவா மாநில அரசுக்கு சொந்தமான, நட்டத்தில் இயங்கிவந்த “கோவா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட்” என்ற நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை இந்திய ஒனறிய அரசின் அனுமதியுடன் வாங்கி, “கோவா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட்” நிறுவனத்தைத் தனது துணை நிறுவனமாக்கிக் கொண்டது.

‘தடுப்பூசி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் ஒருமித்த குரலில் பேச வேண்டும்’ – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் வேண்டுகோள்

“கோவா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட்” நிறுவனம் நட்டத்தில் இயங்கிவந்தாலும், அதைப் பாதுகாக்கும் பொருட்டு அதை HLL நிறுவனத்துடன் இணைத்து அதன் துணை நிறுவனமாக்கி இயங்கவே செய்தது, காப்பாற்றவே செய்தது.
ஆனால், தற்போதைய ஒன்றிய பாஜக அரசானது அரை நூற்றாண்டிற்கு மேல் 55 வருட பாரம்பரியமுள்ள HLL நிறுவனத்தைக் கடந்த ஜனவரி 2018ல் தனியார் மயமாக்க முயற்சித்தது.

இதை இந்திய ஒன்றியத்தின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சமே ஆதரிக்கவில்லை. பினராயி விஜயன் தலைமையிலான கேரளா அரசாங்கமும் HLL நிறுவனம் தனியார் மயமாவதைக் கடுமையாக எதிர்த்தது. இதற்குப் பழி வாங்கும் விதமாகவே ஒன்றிய பாஜக அரசு HLLக்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

HLL நிறுவனத்தின் துணை நிறுவனமான HLL பயோடெக் நிறுவனம்தான் செங்கற்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ளது. HLL பயோடெக் நிறுவனமானது,
2012ல் மன்மோகன்சிங் அமைச்சரவையில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பலநல அமைச்சகத்தின் அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத் அவர்களால் தமிழ்நாட்டிற்கு கிட்டத்தட்ட 594 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டது.

இதற்கான கோரிக்கைகள் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி  ஆட்சியில் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், 2014 ல் பாஜக அரசு அமைந்ததும், 2014-19 காலகட்டத்தில் பாஜக அரசில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஜே.பி.நட்டாவோ, 2019 முதல் உள்ள ஹர்ஷவர்த்தனோ,
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதா?
என்று அப்படியே இந்த HLL பயோடெக்கை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

இதற்கிடையில் 2018 ஜனவரியில் இந்த HLL பயோடெக் மற்றும் இதன் தாய் நிறுவனமான HLL லைப்கேர் உட்பட இதன் தொடர்பாக அனைத்து நிறுவனங்களையும் தனியார்மயமாக்க முனைகிறது பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு. அதற்கு கேரளா அரசாங்கம் கடுமையான எதிர்ப்பு காட்டியதால் சற்றே பின்வாங்குகிறது.

ஒரு பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கவோ, காப்பாற்றவோ முடியாத பாஜக அரசு விற்பதில் மட்டும் முனைப்பு காட்டுகிறது.  இந்நிலையில் டிசம்பர் 2019ல் தொடங்கிய கொரோனா அலையானது ஆழிப்பேரலையாய் உலகம் முழுவதும் சுழற்றி அடிக்க, 2020 மார்ச் முதல் உலகமே முடங்கியது. இந்த கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று உலகம் தடுப்பூசியை நோக்கிப் படையெடுக்கிறது.

பாலஸ்தீன, இஸ்ரேல் யுத்தமும் அதன் பின்னணியும் – சூர்யா சேவியர்

அப்போதும் இந்த HLL பயோடெக்கை கண்டுகொள்ளவே இல்லை ஒன்றிய பாஜக அரசு. தனியார் பார்மா பெருமுதலாளிகளான பூனாவாலாவின் ஸீரம் இன்ஸ்டியூட்டின் “கோவிஸீல்ட்” மற்றும் கிருஷ்ணா இலாவின் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளையே ஒன்றிய அரசும் அனுமதிக்கிறது. பாஜகவின் தனியார்மயமாக்கல் வெறித்தனத்திற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா? ஆனால் சுதேசி என தொடர்ந்து பேசியவர்கள் இவர்கள் தான்.

2021, மே 2ம் தேதி தமிழ்நாட்டில் ஆட்சியும் மாறுகிறது, காட்சியும் மாறுகின்றது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாடு மாநில அரசே நேரிடையாக தடுப்பூசியைக் கொள்முதல் செய்யும், தேவையான தடுப்பூசிகளை தமிழ்நாடே உற்பத்தி செய்யும்” என்கிறார். உடனே பதறிய பாஜக அரசு “தடுப்பூசியை மாநிலங்கள் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து வாங்கக் கூடாது, நாங்களே கொள்முதல் செய்து தருவோம்” என்கிறது.

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

எங்கே மாடர்னா, பைஜர், ஜான்சன் & ஜான்சன் போன்ற அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசியை விற்றுவிடுவார்களோ என்று அஞ்சிய பாஜக அரசானது பதறிக்கொண்டு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை உடனடியாக அமெரிக்காவுக்கே அனுப்பி “லாபி – lobby” செய்கிறது.

இதற்கிடையில் கடந்த மாதம்(25ம் தேதி) முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரடியாக திருக்கழுக்குன்றம் HLL பயோடெக் நிறுவனத்திற்கு ஆய்வுக்கு சென்ற போதுதான் பாஜகவின் அனைத்து சதிவேலைகளும் வெளியே தெரியவருகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும், நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலுவையும் நேரிடையாக கடந்த வியாழக்கிழமை (27ம் தேதி) டெல்லிக்கு அனுப்பினார்.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் HLL பயோடெக்கை நீங்கள் நடத்துகின்றீர்களா அல்லது நாங்கள் நடத்தவா எனக் கேட்க ஆடிப்போய்விட்டது பாஜக அரசு. ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளது பாஜக அரசு. பாஜகக்கு வேறு வழியே இல்லை.

ஒன்று அவர்கள் HLL பயோடெக்கை நடத்த வேண்டும் அல்லது தமிழ்நாட்டு அரசிடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இரண்டுமே இல்லையென்றால் பாஜக அரசு மிகப்பெரும் அவமானத்தை இந்திய அளவில் சந்திக்கும். தனியாருக்கு துணைபோவதும் அப்பட்டமாக தெரிந்துவிடும். பாஜகவை நிலைக்குலைய செய்யும் முதல்வர் ஸ்டாலினின் நுட்பமான அரசியல் நகர்வு இது என்றே சொல்லலாம்.

அணையாமல் சிதையில் எரியும் தீ – கண்ணீரால் அணைத்துவிடமுடியுமா என்ன?

கடந்த மார்ச் 2020 கடைசி வாரத்திலிருந்து இன்றுவரை உலகமே ஊரடங்கில் இருந்தது. கடந்த மார்ச் 2020ல் இருந்து 2021, மே-6ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட 13 மாதங்கள் முதலமைச்சராக இருந்துள்ளார். உலகமே தடுப்பூசியை நோக்கி பயணப்பட ஆரம்பித்ததை அவர் நன்கறிவார். அப்போதும் சுகாதாரத்துறை செயலர் இப்போதுள்ள ராதாகிருஷ்ணன் தான்.

சென்னைக்கு புறக்கடையில் உள்ள இந்த HLL பயோடெக்கைப் பற்றி முதலில் அவருக்கு தெரியுமா? வெறும் 10 மாதங்களில் பாரத் பயோடெக் கோவேக்ஸின் தடுப்பூசியை கண்டுபிடித்துச் சந்தைப்படுத்துகிறது. ஆனால், மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான HLL பயோடெக்கால் இது முடியாமற் போகிறது. காரணம் மத்திய பாஜக அரசின் பாராமுகம். தமிழ்நாடு மாநிலத்தின் முந்தைய அரசும் கண்டுகொள்ளவில்லை.

ஸ்டாலின் அவர்களின் வேகத்தில் கொஞ்சமாவது எடப்பாடி பழனிசாமி அவர்கள் காட்டி,
ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடி தந்திருந்தால், இதே HLL பயோடெக் நிறுவனத்தாலும் தடுப்பூசியைத் தயாரித்திருக்க முடியும். கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுத்திருக்க முடியும், பல லட்சக்கணக்கான மக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திருக்க முடியும். பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும். கத்தர், துபாய், குவைத், சிங்கப்பூர் போன்று கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டிருக்க முடியும். ஆனால் பீலா ராஜஷை விட்டு தப்லீக் ஜமாத், சிங்கிள் ஸோர்ஸ் என்று கதை விட்டதைத் தவிர, முந்தைய ஆட்சியில் என்னதான் செய்தார்கள் என்பது விளங்கவில்லை.

” கொரோனா தவறாக கையாளப்பட்டதற்கான முக்கிய காரணம் மோடியின் தலைமைதான், அவர் தலைக்கனம் பிடித்தவர் ” – ராமச்சந்திர குஹா

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதே நுட்பத்துடனும் மாநில சுயசார்பு சிந்தனையுடனும் வேகத்துடனும் சென்றால் மூன்றாம் அலை என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடலாம். இன்னும் மூன்று மாதங்களுக்குள் கொரோனாவை இல்லாமல் செய்துவிடலாம்.

முதல் அலையைத் தடுக்கத் தவறியதால் இரண்டாம் அலை வந்தது. இரண்டாம் அலையில் தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தினால் மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்