சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில், சிற்றுண்டிக்கடையில், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்த பாஜகவை சேர்ந்த இரண்டுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சிக்காரர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர், கடைக்காரர்களை மிரட்டும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பரவியது.
சாப்ட சிக்கன் ரைசுக்கு காசு கேட்டா அமித்ஷாவுக்கு போன் போடுவானாம்.. யோவ் சங்கி @annamalai_k என்னய்யா இது 😂 pic.twitter.com/v9k9DyGRU5
— ɱąཞƙ2ƙąƖı (@Mark2Kali_) January 12, 2021
@Mark2Kali என்ற டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், “மதக்கலவரமாகும்” என்று ஒருவர் கூறுவதுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. தான் பாஜகவை சேர்ந்தவன் என்று கூறும் அந்த நபர், மற்றொருவரை காட்டி “நான் அவனை கன்ட்ரோல் பண்ணி வச்சிருக்கேன். அவன் இந்து முன்னணி ஆளு” என்று கூறுகிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.