“உக்ரைனில் கொல்லப்பட்ட மருத்துவ மாணவர் நவீன் 12ஆம் வகுப்பு தேர்வில் 96 விழுக்காடும், முன் பல்கலைக்கழக தேர்வில் 97% விழுக்காடு பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அப்போதும் கூட இந்தியாவில் அவருக்கு மருத்துவ இடம் மறுக்கப்பட்டுள்ளது. நவீனின் மரணத்துக்கு நீட் தேர்வே காரணம்” என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக குமாரசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
நீட் நுழைவுத் தேர்வு, மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவுகளைத் தகர்த்து வருகிறது. நீட் தேர்வு என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் மரண சிலையாக மாறியுள்ளது. உயர்கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்று ஒதுக்கப்பட்டு, இல்லாதவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
தகுதி என்ற போர்வையில் திறமையான ஆனால் பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வின் வெட்கமற்ற முகத்தின் பிரதிபலிப்பே உக்ரைனில் ஷெல் தாக்குதலில் பலியான மருத்துவ மாணவர் நவீனின் சோகமான மரணம்.
நீட்டுக்கு எதிரான போரில் தமிழ்நாடு வெல்லும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் உரை
நவீன் 12ஆம் வகுப்பில் 96 விழுக்காடும், பியூசியில் 97 விழுக்காடும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அப்போதும், இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக மதிப்பெண் விழுக்காட்டைப் பெறுவது எளிதானது அல்ல, இருந்தும் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவ சீட் மறுக்கப்பட்ட பிறகு, நவீன் தனது கனவை நனவாக்கி மருத்துவராக ஆவதற்கு உக்ரைன் சென்றார். அந்த இளைஞனின் மரணம் இந்தியாவின் `சுய மனசாட்சியை’ கேள்வி கேட்க வைத்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?
நீட் தேர்வுக்கு பிறகு ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மருத்துவக் கல்வி கனவாகி விட்டது. நீட் கோச்சிங் சென்டர்கள் காளான்களாக வளர்ந்து மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 99 விழுக்காடு மாணவர்கள் இந்தப் பயிற்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?
அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமில்லை. இந்த உண்மையை உணர்ந்து, நீட் கோச்சிங் சென்டர்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்தி, நவீன் போன்ற மாணவர்களின் சடலங்களில் நடனமாடுகின்றன. பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி அளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.
வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பெறும் 90 விழுக்காடு மாணவர்கள் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைகிறார்கள் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கருத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட்டுப் பேசுவதற்கு இது நேரமில்லை
புதிய சர்ச்சை அல்லது விவாதத்திற்கு வழிவகுக்கும் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட விரும்பவில்லை என்று ஒன்றிய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை வெளியிடுவதன் பின்னணியில் உங்கள் நோக்கம் என்ன? அவரது இந்த கருத்து பல யூகங்களுக்கு வழிவகுக்கிறது.
நீட் தேர்வு எழுதிய அரியலூரைச் சேர்ந்த மாணவி – தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை
அப்படியானால் நீட் பயிற்சிகளுக்குப் பின்னால் இருப்பது யார்? இவர்களுக்கு ஒன்றிய அரசு ரகசிய ஆதரவு அளிக்கிறதா? நீட் தேர்வின் கல்வி அராஜகத்தால் இன்னும் எத்தனை மாணவர்கள் இறக்க வேண்டும்?. நவீன் மரணம் நீட் தேர்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி பணக்காரர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட மருத்துவக் கல்வி முறை நாட்டுக்கே அவமானம். புதிய கல்விக் கொள்கையைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு ஒருமுறை இதயத்திலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு, கர்நாடகாவின் முன்னால் முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவுகள்:
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2
உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.