Aran Sei

பள்ளி மாணவர்களுக்கு காலணி வழங்கும் டெண்டரில் முறைகேடா? – பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ரசுப் பள்ளி மாணவ – மாணவியருக்கு காலணிகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த மனுவுக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், நடப்பு 2020-21ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவ – மாணவியருக்கான காலணிகள் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு பாடநூல் கழகம், கடந்த மார்ச் மாதம் டெண்டர் கோரியது.

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ஐஏஎஸ்களின் பதவியைப் பறிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

இந்த டெண்டருக்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் தங்கள் நிறுவனத்தைத் தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, ஹரியானாவைச் சேர்ந்த பிஎன்ஜி பேஷன் கியர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, குறைந்த தொகையைக் குறிப்பிட்டிருந்த தங்கள் நிறுவனத்தைத் தகுதி நீக்கம் செய்து விட்டு, பேட்டா நிறுவனத்துக்கும், பவர்டெக் எலெக்ட்ரோஇன்ப்ரா என்ற நிறுவனத்துக்கும் பணிகள் வழங்க இருப்பதாகவும், அதற்குத் தடை விதித்து, தங்களுக்கு டெண்டர் ஒதுக்க வேண்டும் என்றும் மனுதாரர் நிறுவனம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்