நாட்டிலேயே முதன்முறையாக உத்தர பிரதேசத்தில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவுள்ளது என்று அம்மாநில கால்நடை, மீன்வளத் துறை, பால்வளத் துறை அமைச்சர் லக்சுமி நாராயண் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று(நவம்பர் 14), உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள லக்சுமி நாராயண், “மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட மாடுகளின் உயிரைக் காப்பாற்ற உத்தரப் பிரதேசத்தில் மாடுகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவிருக்கிறது. இதற்காக 515 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு புதுமையான திட்டம் இது, நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
“இந்த சேவையானது எண் 112 அவசரகால சேவையைப் போல் மாடுகளுக்கு பயன் தரும். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு உதவியாளர்கள் இருப்பார்கள். அழைப்பு வந்த அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் அவர்கள் தேவைப்படும் இடத்தில் இருப்பார்கள். இந்தத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இதற்காக லக்னோவில் ஒரு கால் சென்ட்டர் தொடங்கப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இலவச உயர் தர விந்தணு திட்டம் மற்றும் எம்ப்ரியோ ட்ரான்ஸ்ப்ளான்ட் தொழில்நுட்பம் வழியாக உத்தரபிரதேசத்தில் மாடுகளை பெருக்கும் மேன்மையடையும். எம்ப்ரியோ தொழில்நுட்பம் வழியாக மலட்டு மாடுகளைக் கூட பால் கொடுக்கும் மாடுகளாக மாற்ற முடியும்” என்று லக்சுமி நாராயண் தெரிவித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.