Aran Sei

டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ஏர் இந்தியா – ஒன்றிய அரசு அறிவிப்பு

ர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது.

இது குறித்து, நேற்று(ஜனவரி 27), ஒன்றிய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) செயலாளர் துஹின் காந்தா பாண்டே செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஏர் இந்தியா ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது, ​ஏர் இந்தியா நிறுவனத்தின் ​புதிய உரிமையாளர் டாலேஸ்” என்று அறிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறுகையில், “ஏர் இந்தியாவை கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஏர் இந்தியாவை மீண்டும் டாடா பெற்றிருப்பதில் டாடா குழுமம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்

“உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை உருவாக்க அனைவருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலாகவுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு விற்றது.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் குழுமத்திற்கு விற்பனை செய்வதை நிறுத்துங்கள் – பிரதமர் மோடிக்கு மத்திய தொழிற்சங்கங்கள் கடிதம்

அதானியிடம் கையளிக்க பணியாளர் குடியிருப்பை காலி செய்ய உத்தரவிட்ட ஏர் இந்தியா – காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு

‘ஏர் இந்தியா தனியாருக்கு விற்கப்பட்டது அரசின் அர்ப்பணிப்பை காட்டுகிறது’- பிரதமர் மோடி

‘ஆக்கிரமிப்பாளர்கள் மனிதர்களை வீழ்த்துகிறார்கள் ஆட்சியாளர்களோ விமானங்களையே வீழ்த்துகிறார்கள்’ – ஏர் இந்தியா விற்பனை குறித்து சு.வெங்கடேசன் விமர்சனம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்