கொரனோ தடுப்பூசி 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைத்து வயதினருக்கும் வழங்க வேண்டுமென உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மன அழுத்தத்திற்கு காரணம் என்ன? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்
அரசியல் செயல்பாட்டாளர் டென்சீன் பூனாவாலா, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொரனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் எல்லா வயதினருக்கும் கொரனோ தடுப்பூசி வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , அனைத்து குடிமக்களுக்கும் கொரனோ தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
SOURCE: THE NEW INDIAN EXPRESS
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.