சீனாவில் பிபிசி உலக செய்தி தொலைக்காட்சியை (BBC World) ஒளிபரப்பத் தடை விதித்து அந்நாட்டின், தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம், சீனாவின் அரசு தொலைக்காட்சிக்கான உரிமத்தை, பிரிட்டனின் ஊடக கட்டுப்பாட்டாளர் ரத்து செய்ததற்கு எதிர்வினையாக. இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீன புத்தாண்டை முன்னிட்டு, அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிசி வோர்ல்ட் நியூஸின், சீனா தொடர்பான செய்திகள், ”நியாயமானதாகவும், உண்மையாகவும்” இருக்க வேண்டும் என அரசின் விதிமுறைகளை மீறியதோடு, சீன நலன்கள் மற்றும் சீனாவின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்காகவே உபா சட்டம் பயன்படுகிறது – எம்.எச்.ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
எனவே, சீனாவில் ஒளிபரபப்படும் வெளிநாட்டு தொலைக்காட்சிக்கான நிபந்தனைகளை, இந்தத் தொலைக்காட்சி (பிபிசி வேர்ல்ட்) பூர்த்தி செய்யாததால், அடுத்த ஒராண்டுற்கு ஒளிபரப்பு அனுமதி கேட்டு, பிபிசி அளித்த விண்ணப்பம் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிபிசி நிறுவனம், சீனாவின் நடவடிக்கை வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில், “சீன அதிகாரிகளின் இந்த முடிவால் நாங்கள் ஏமாற்றமடைந்திருக்கிறோம். உலகின் நம்பகமான சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி, தனது செய்திகளை நேர்மையாகவும், பாரபட்சமின்றியும், யாருக்கும் ஆதரவாக இல்லாமலும், அச்சமில்லாமலும் வழங்கி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்: பாஜகவில் சேர அழைப்பு
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாமினிக் ராப், பிபிசி தொலைக்காட்சிமீதான சீனாவின் தடை ஏற்றுகொள்ள முடியாதது என்றும், உலகளவில் இது சீனாவின் மதிப்பைக் குறைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
”ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் விதமாக, சீனாவில் பிபிசி வோர்ல்ட் நியூஸ் தொலைக்காட்சிக்குத் தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராப், ”உலகெங்கிலும் உள்ள ஊடக மற்றும் இணைய சுதந்திரங்கள் மீது சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இந்தச் சமீபத்திய நடவடிக்கை, உலகத்தின் பார்வையில் சீனாவின் நற்பெயருக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.
China’s decision to ban BBC World News in mainland China is an unacceptable curtailing of media freedom. China has some of the most severe restrictions on media & internet freedoms across the globe, & this latest step will only damage China’s reputation in the eyes of the world.
— Dominic Raab (@DominicRaab) February 11, 2021
சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கின் (சிஜிடிஎன்) உரிமத்தை, ஸ்டார் சீனா மீடியா லிமிடெட் என்ற நிறுவனம் விதிகளை மீறி வைத்திருப்பது, ஒரு விசாரணையின் மூலம் தெரியவந்ததை அடுத்து, சிஜிடிஎன் தொலைகாட்சியின் உரிமத்தை, பிரிட்டன் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம், பிப்ரவரி 4 ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Reuters
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.