Aran Sei

ராணுவ துறையில் அதானி குழுமம் ஆதிக்கம் செலுத்த பாஜக அரசு அனுமதிக்கிறது – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

பாதுகாப்புத் துறையில் அதானி குழுமம் “ஏகபோகத்தைப் பெற” பாஜக அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி 3 முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளது.

அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

அதன்படி அந்தக் கட்சி, அதானி நிறுவனங்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் ஒன்றிய அரசுக்கும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்திலிருந்த அதானி 24-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்: கடந்த 13 நாட்களில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிவு

அந்த வகையில் அதானி நிறுவனங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி நேற்று 3 முக்கிய கேள்விகள் எழுப்பி உள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “இன்று தொடர்ந்து 10-வது நாளாக அதானி நிறுவனங்களின் அற்புதமான வளர்ச்சியில் பிரதமரின் பங்கு குறித்து 3 முக்கிய கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. உங்கள் மவுனத்தைக் கலையுங்கள், பிரதமர், அவர்களே.

1. கவுதம் அதானி, 2017-ம் ஆண்டு மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்திலிருந்து, அவர் இந்திய, இஸ்ரேல் ராணுவ உறவில் சக்திவாய்ந்த லாபகரமான பங்களிப்பைக்கொண்டிருக்கிறார். அவர், டிரோன்கள், மின்னணுவியல், சிறிய ரக ஆயுதங்கள், விமான பராமரிப்பு போன்றவற்றை உள்ளடங்கிய இஸ்ரேலிய நிறுவனங்களுடன் கூட்டுத் திட்டங்களைப் பெற்றிருக்கிறாரே?

2. அதானி நிறுவனங்கள், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு ‘ஷெல்’ நிறுவனங்கள் தொடர்பாக நம்பத் தகுந்த குற்றசாட்டுகளை சந்தித்துள்ள நிலையில், இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உறவை ஒரு கேள்விக்குரிய குழுமத்திடம் ஒப்படைப்பது தேசிய நலனுக்காகவா? உங்களுக்கும், ஆளும் கட்சிக்கும் (பாஜக) இதில் ஏதேனும் கைமாறு உண்டா?

பிரதமர் மோடிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு?: ஒவ்வொரு தொழிலிலும் அதானி எப்படி வெற்றி பெறுகிறார்? – மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி

3. நமது ஆயுதப் படைகளின் அவசரகாலத் தேவைகளை அரசு ஏன் சாதகமாகப் பயன்படுத்தி, எதற்காக புத்தொழில் நிறுவனங்கள் (‘ஸ்டார்ட்-அப்’கள்) மற்றும் நிறுவப்பட்ட இந்திய நிறுவனங்களின் இழப்பில், அதானி டிரோனின் ஏகபோக ஆதிக்கத்தை எளிதாக்குகிறது? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

Source : the print

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்