உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் உடல்மீது போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியின் மீது பாஜக கொடிப் போர்த்தப்பட்டது.
கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்படும்போது, அம்மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த கல்யாண் சிங் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது இறுதி மரியாதை நிகழ்வின்போது அவரது உடல்மீது இந்திய தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்த நிலையில், அதனை பாதி மறைக்கும் அளவு பாஜகவின் கட்சிக்கொடியும் போர்த்தப்பட்டுள்ளது.
தேசியக் கொடியின் மீது பாஜக கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பாஜக கொடியைப் போர்த்தியுள்ளார். இதேநிலையில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தும்போது கல்யாண் சிங்கின் உடல்மீது தேசியக் கொடி மட்டுமே போர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேசிய இளைஞர் காங்கிரசின் தேசியத் தலைவர், “புதிய இந்தியாவில் தேசியக்கொடியின் மீது பாஜகவின் கட்சிக்கொடி போர்த்தப்படுவது சரியா?”என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
source: தி வயர்
தொடர்புடைய பதிவுகள்:
ஒரு பேரரசு உருவாக துணையிருந்த உலகளாவிய அபின் மற்றும் போதைப் பொருள் கடத்தல் – தாமஸ் மனுவேல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.