Aran Sei

ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சும் பாஜக – சிவ சேனா

ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுவதாலேயே அவரது குடும்பத்தைப் பற்றி இழிவுபடுத்தும் பிரச்சாரங்களை டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் எனச் சிவ சேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

அடுத்த மாதம் அவுரங்காபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் தோழமைக் கட்சிகளான சிவ சேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே அந்த நகரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அன்று பிரிட்டிஷ் இன்று மோடி : சத்யாகிரகத்தைத் தொடங்கிய விவசாயிகள் – ராகுல் காந்தி

எனினும், “மத்திய அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு மோடி அரசுக்கு வலிமையான மாற்றாக இருக்க வேண்டும்” என்று சிவ சேனா வலியுறுத்தியுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும் சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது.

சிவ சேனா கட்சி ‘சாம்னா’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தி வருகிறது. இந்தப் பத்திரிகை ராகுல் காந்தியை ஒரு போர் வீரன் எனப் பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக இன்று சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கத்தில், “டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் ராகுல் காந்திக்கு அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை. அவ்வாறு இல்லாதிருந்தால், ராகுல் காந்தி குடும்பத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரங்களை பாஜகவினர் மேற்கொள்ள மாட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் ? – ராகுல் காந்தி கேள்வி

“ஒருவன் சர்வாதிகாரியாக இருந்தாலும் தனக்கு எதிராக ஒரே ஒரு மனிதன் இருந்தாலும் அவனைக் கண்டு அஞ்சுகிறான். இந்தத் தனி வீரன் நேர்மையானவனாக இருந்தால், அந்தப் பயம் மேலும் நூறு மடங்கு அதிகரிக்கிறது. டெல்லி ஆட்சியாளர்களின் ராகுல் காந்தி குறித்த அச்சம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்” என்று பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவது ஒரு நல்ல விஷயம். நரேந்திர மோடியைத் தவிர பாஜகவுக்கு வேறு மாற்று இல்லை என்பதையும், ராகுல் காந்தியைத் தவிர காங்கிரஸு க்கு வேறு மாற்று இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

`தலித்துகளும் ஆதிவாசிகளும் படிக்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்’ – ராகுல் காந்தி

“ராகுல் காந்தி ஒரு பலவீனமான தலைவர் என்று பிரச்சாரம் செய்த போதிலும், அவர் இன்னும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை ஒரு போர்வீரனைப் போல அஞ்சாமல் எதிர்த்து நின்று தாக்குகிறார். இந்த எதிர்க்கட்சி, ஒரு கட்டத்தில், பீனிக்ஸ் போன்ற சாம்பலிலிருந்து கிளம்பிவரும்” எனவும் சிவ சேனா கட்சி ‘சாம்னா’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்