Aran Sei

எங்களை வெறுத்த அனைவருக்கும் எங்கள் அன்பு – இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட அனுராக் காஷ்யப்

யக்குனர் அனுராக் காஷ்யப் தன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்குப் பின் முதன்முறையாகத் தனது இன்ஸ்டாகிராம்(instagram) பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் அவரும் நடிகை தாப்ஸியும் உள்ள புகைப்படைத்தை வெளியிட்டு
” #டோபாராவை துவங்கிவிட்டோம், எங்களை வெறுத்த அனைவருக்கும் எங்கள் அன்பு” என்றும் பதிவிட்டுள்ளார்.

அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் டோபாரா படபிடிப்பின்போது எடுக்கப்பட்டது.

நடிகை டாப்சி வீட்டில் சோதனை: பாரிஸ் பங்களா சாவி கிடைத்ததா? – வருமான வரித்துறையை பகடி செய்த டாப்சி

அனுராக் காஷ்யப்யின் பதிவுக்குச் சில மணிநேரம் முன்பு ட்விட்டரில் வருமான வரித்துறை சோதனைகுறித்து பதிவிட்டுள்ள நடிகை தாப்ஸி மூன்று பதிவுகளைப் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில் “மூன்று நாட்கள் மூன்று விஷயங்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள் ”

1.கோடைகாலத்தில் நான் தங்குவதற்காகப் பாரிஸில் எனக்கு இருப்பதாகச் சொல்லப்படும் சொந்தமான பங்களாவின் சாவி

2. நான் ஏற்கனவே மறுத்து வந்த, என் எதிர்கால பயன்பாட்டிற்காக வைத்திருப்பதாக சொல்லப்படும் 5 கோடி ரூபாய்க்கான ரசீது

3.நிதியமைச்சர் கருத்தின் படி, 2013 ஆம் ஆண்டு என வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்பான என் நினைவுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்

பாஜக அரசை எதிர்த்து கருத்து கூறியதால் குறிவைக்கப்படும் அனுராக் கஷ்யப், தாப்சி பன்னு – எதிர்க்கட்சிகள்

கடந்த மார்ச் 3 அன்று இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை தாப்ஸி ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்