Aran Sei

மாயமான சீன தொழிலதிபர் – அலிபாபா இசை செயலியை முடக்கிய அரசு

Image Credits: Business Wire

சீனாவின் இணையவழி வணிக நிறுவனமான அலிபாபா குழுமம் அதன் பிரபலமான இசை ஒளிபரப்பு தளமான ‘சியாமி மியூசிக்’ மூடப்படுவதாக அறிவித்துள்ளது. குழுவில் தொடர்ந்து விசாரணைகள் மற்றும் அதன் நிறுவனர் ஜாக் மாவின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

“செயல்திட்ட மாற்றங்கள் காரணமாக” ‘சியாமி மியூசிக்’யின் தள சேவைகள் பிப்ரவரி 5-ம் தேதி முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சியாமி மியூசிக் 2008-ல் தொடங்கப்பட்டது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அலிபாபா நிறுவனம் இதனை கையகப்படுத்தியது. அலிபாபா ஒரு இணையவழி வணிக நிறுவனமாக மட்டுமில்லாமல் நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. இது தற்போது கட்டுப்பாட்டாளர்களால் கண்காணிப்பின் கீழ் உள்ளது. இப்போது சியாமி மியூசிக் தளம் முடக்கப்படுவதை தொடர்ந்து அலிபாபா நிறுவனம்  மேலும் மறுசீரமைக்கப்படுமா எனும் குழப்பம் எழுந்துள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அலிபாபா நிறுவனரைக் காணவில்லை – சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ளாரா?

அலிபாபாவின் ‘அன்ட் குழுமத்தின்’ பங்கு வெளியீடு திட்டத்தின் (initial public offering) போது அந்நிறுவனத்திற்கு இந்தச் சிக்கல் தொடங்கியது. ‘அன்ட் குழுமம்’ என்பது அலிபாபாவின் நிதி நிறுவனமாகும், இது சீனாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பண பரிமாற்று நிறுவனமும் கூட. பங்கு வெளியீடு திட்டம் 35 பில்லியன் டாலர் திரட்ட வாய்ப்புள்ளது என்றும் இது ஒரு உலக சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நவம்பர் மாத தொடக்கத்தில் கட்டுப்பாட்டாளர்களால் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஷாங்காயில் ஜாக் மா ஒரு உயர் பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார். ஜாக் மாவின் குழுமம் நிதி துறையில் நுழைந்ததற்கு பிறகு அரசு நடத்தும் வங்கிகளின் ஏகபோக உரிமை பாதிக்கப்பட்டது. எனவே அவரது இந்தப் பேச்சு கட்டுப்பாட்டாளர்களை கோபப்படுத்தியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஏகபோக செயல்கள்

டிசம்பர் 24-ம் தேதி, சந்தை ஒழுங்குபடுத்தல் நிர்வாகம் அலிபாபா நிறுவனத்தின் ‘ஏகபோக உரிமை’ குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியது. அது “வணிகர்களை இரண்டு தளங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க வற்புறுத்துவது” குறித்தும் விசாரிக்கப்படும் என்று கூறியது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக மாணவரணி செயலாளர் கைது – விரைந்து தண்டிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்

பங்கு வெளியீடு திட்டம் நடைபெறுவதற்கு முன் கட்டுப்பாட்டாளர்களுடன் ஜாக் மா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகச் சீன ஊடகங்கள் கூறின. ஒரு மாதத்திற்கு முன் சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பாங்க் ஆஃப் சீனா, கட்டுப்பாட்டாளர்களுடன் இனைந்து அன்ட் குழுமத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அப்போது, “நிதி கட்டுப்பட்டு நெறிமுறை, நியாயமான போட்டியில் ஈடுபடுதல் மற்றும் வாடிக்கையாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாத்தல்” ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஷாங்காய்யில் நடைபெற்ற உரைக்குப் பிறகு ஜாக் மா பொது விழாக்களில் கலந்து கொல்வதை  தவிர்த்து வருகிறார். இது வரை சீன ஊடகங்களோ கட்டுப்பாட்டாளர்களோ ஜாக் மா தவறு இழைத்ததாகக் குற்றம்சாட்டவில்லை. ஆனால் குழு தொடர்பான விசாரணைகள் நடைபெறும் வரை அவர் நாட்டில் தங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார் என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்