அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார். இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் எஸ்பிஐ, எல்ஐசி முன் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய கே.எஸ்.அழகிரி, “இந்திய ரயில்வேயில் 2030-ம் ஆண்டு வரை 39 திட்டங்களை அறிவித்துள்ளனர். அதில், தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம்கூட இல்லை. குறிப்பாக, கூடுதலாக அந்தியோதயா ரயில்களை இயக்கும் திட்டம், விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கும் திட்டம் எதுவுமில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது அதிகாரத்தை தாண்டி தமிழ்நாட்டை விமர்சிக்கிறார் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியாவில் எல்லா கிராமங்களிலும் தீண்டாமை நிலவுகிறது. தீண்டாமைக்கு எதிராக தமிழக அரசும், எங்கள் கூட்டணியும் இருக்கிறது. தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றங்கள் நடைபெறுகின்றன. அவற்றை மூடி மறைக்கவில்லை. ஆனால், உத்தர பிரதேசம் போன்ற பாஜக ஆளும் பிற மாநிலங்கள் எப்படி இருக்கின்றன என ஒப்பிட்டுப் பார்த்து, விமர்சிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.