கொரோனா பரவலில் இந்தியா சிக்கிதவிக்கும் நிலையில், கும்பமேளா நடத்த வேண்டுமா? என துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பமேளா குறித்து பாஜக உறுப்பினரும் மல்யுத்த வீரருமான யோகேஷ்வர் தத் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அபினவ் பிந்தரா இதனைத் தெரிவித்துள்ளார்.
Should the Khumb mela even be held while an infectious pandemic lays waste to india? A virus does not discriminate between religions.
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) April 17, 2021
கும்பமேளா குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த யோகேஷ்வர் தத், “கும்பமேளாவிற்கு யாரும் சட்டவிரோதமாக செல்லவில்லை, மக்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள். பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது யாரும் துப்பவில்லை, நிர்வாகத்திற்கு பயந்து மறைந்த யாரும் ஓடவில்லை. அமைதியாக செயல்படும் கும்பமேளா பக்தர்கள் மீது அவதூறு செய்வதை நிறுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.
No one in the Kumbh Mela is reaching there illegally, people are following all protocols, no one is spitting at the security and medical staff, no one is running away after hiding from the administration.
Stop defaming the peaceful devotees at Kumbh. #ThankuTirathJi
— Yogeshwar Dutt (@DuttYogi) April 14, 2021
இதற்குப் பதிலளித்துள்ள துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்திரா, “கொரோனா பரவலில் இந்தியா சிக்கி தவிக்கும் நிலையில், கும்பமேளா நடத்தபட வேண்டுமா?. கொரோனாவிற்கு மதப் பாகுபாடு கிடையாது” என பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.