Aran Sei

‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச

னைத்துச் சாதியினரையும் பாலினப் பாகுபாடின்றி அர்ச்சராக்கவும், தமிழில் அர்ச்சனையை முன்னிலைப்படுத்தவும் நேற்று (ஜூன் 20) இணையவழியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்து சதியினரும் பாலினரும் கோயில் அர்ச்சகராக வேண்டுமென தமுஎகத சார்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மதுகூர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.  எழுத்தாளர் சிகரம் செந்திநதன், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா.ரெங்கநாதன், இந்துசமைய அறநிலையத்துறையில் இணை ஆணையராக இருந்து பணி ஓய்வு பெற்ற எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோர் கருத்துரைத்தனர். நிகழ்ச்சியை தமுஎகச -வின் மாநிலப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைத்தார்.

கொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு  எதிரானதல்ல; நவீன தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு நேர்காணல்

இக்கூட்டத்தில் பேசிய ஆகம அறிஞர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “தீட்சை பெற்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்று ஆகமம் கூறுகிறது. அரசு உருவாக்கிய அர்ச்சகர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள், தீட்சை பெற்றிருக்கிறார்கள். சிவாகமத்தில் குறிப்பிட்ட சாதியினர்தான் பூசை பண்ண வேண்டும் என்று இல்லவே இல்லை. ஆகமத்தின் 48 ஆம் அத்தியாயத்தில் சாமிநாதத்தில் அர்ச்சகருக்குக் கோத்திரமே இல்லை என்று கூறுகிறது.” என்று தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் – சிவசேனா எம்.எல்.ஏ உத்தவ் தாக்ரேவிற்கு கடிதம்

மேலும்,”பெண்கள் அர்ச்சகர்களாகக் கூடாது என்று எப்படிச் சொல்லலாம். சிவாகமத்தில் எங்குமே இப்படிக் குறிப்பிடவே இல்லை. சிவாச்சாரியர் மனைவி தாடகை பூசை செய்ய லிங்கமே வளைந்து கொடுத்தது என்று ஆகமம் குறிப்பிடுகிறது. இன்னொரு சிவாச்சாரியார் மனைவி லிங்கத்தின் மீது சிலந்தி வலை பின்னியிருப்பதை வாயால் ஊதி அப்புறப்படுத்துகிறார். பெண்களின் மூன்று நாள் மாதவிலக்கு என்பது கடவுளுக்குப் பொருந்தவே பொருந்தாது. ஏழாம் நூற்றாண்டிலேயே தமிழில் பூசை செய்ததாக திருஞான சம்பந்தர் பதிவு செய்கிறார். பெண்ணுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கல்லில் கட்டிக் கடலில் ஆழ்த்தியபோது அப்பருக்கு உயிர் கொடுத்தது தமிழ். வேதாகமம் என்று வீண்வாதம் ஆடுகின்றீர் என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்.” என்று ஆகம அறிஞர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் கூறினார்.
தமுஎகசவின் மாநிலத் துணைத் தலைவர் சிகரம் செந்தில்நாதன் பேசும்போது, “கண்ணப்பன் எடுத்துச் சென்ற மாமிசத்தை கண்ணப்பன் ருசித்தபிறகு சிவன் சாப்பிட்டார். காரைக்கால் அம்மையார் பக்தி செய்தது எப்படி?
இது தமிழகக் கோயில்கள். இங்கே வேதாகம விஷயங்களை அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. வடமரபு வேறு. தமிழ் மரபு வேறு” என்று தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் அனைத்துச் சாதியினரும் பாலினரும் அர்ச்சகராக்க தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. அதில் ”தமிழ்ச்சமூகம் பண்பாட்டிலும் சமூகநீதியிலும் ஓரங்கமான வழிபாட்டுரிமையை அடைவதில் அரை நூற்றாண்டுகாலமாக பல்வேறு தடைகளை எதிர்கொண்டுவருகிறது. அனைத்துச்சாதியினரையும் அர்ச்சராக்கும் சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக பணியமர்த்தப்படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை என்கிற இயல்பான எளிய உரிமைகளுக்காகக்கூட உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றுவர வேண்டியுள்ளது. தீர்ப்பினைப் பெற்றாலும் நடைமுறைப்படுத்துவதில் இடர்ப்பாடு நீடிக்கிறது” என்று கூறியுள்ளது.

மேலும், ”புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்துச் சாதியினரையும், பயிற்சி முடிக்கிற பெண்களையும் 100 நாட்களில் பணியமர்த்துவதாக செய்துள்ள அறிவிப்பை இந்தக் கருத்தரங்கின் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. அரசின் அறிவிப்பு வெளியானதும் பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கையின் நியாயத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. இதேபோல தமிழில் குடமுழுக்கு செய்வதற்கும், தமிழில் அர்ச்சனை செய்வதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.” என்று தீர்மாணத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்