பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு மாநில நிர்வாகி பொறுப்பை தமிழ்நாடு பாஜக கொடுத்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்நிறுவனம் பெயரில்சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியானது. அதில், ரூ.1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த விளம்பரம் பணம் மீதான ஆசையைத் தூண்டி,மோசடி செய்யும் திட்டம் என புகார் எழுந்தது.
டெல்லி: 53 கோவில்களை இடிக்க திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு முடிவு – ஆம் ஆத்மி உறுப்பினர் குற்றச்சாட்டு
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள், 70 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள நிர்வாகிகளான உஷா, ஹரிஷ், ராஜசேகர் உட்பட மேலும் சிலரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசம் – தலித் என்பதால் தாக்கபட்ட ஜொமாட்டோ ஊழியர் – இருவரை கைது செய்துள்ள காவல்துறை
இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஹரிஷை தற்போதுவரை காவல்துறையினர் தேடிவரும் நிலையில் அவருக்கு பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர் எனக் கூறப்படுகிறது.
நன்றி: தமிழ் இந்து
Draupadi Murmu | பழங்குடி ஜனாதிபதி | துரோகம் செய்ய ஒரு சாக்கு | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.