நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை இந்திய ஒன்றியத்தின் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, சிபிஎஸ்இ பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதுகுறித்து, இன்று (ஜூன் 2), சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில், தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை. நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள #Covid19 சூழலை ஒன்றிய கல்வித்துறை பயன்படுத்த நினைக்கிறது.#NEET pic.twitter.com/vJpSofB7M3
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 2, 2021
மேலும், நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை ஒன்றிய அரசின் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று ஒன்றிய அரசை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.